LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- துபாய்

துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா

துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது.இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை தமிழக பாரம்பர்யத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த விழாவினையொட்டி பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது. குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ரவி, கோமதி ரவி குடும்பத்தினர் சிறப்புடன் செய்திருந்தனர். காலை வெண் பொங்கல், வடை, சாம்பார் மதியம் சோறு, வத்தல் குழம்பு, ரசம், அப்பளம் என அனைத்தையும் தமிழக பாரம்பர்யத்துடன் அஜ்மானில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தமிழ் உணவகத்தார் தயாரித்து வழங்கினர். இந்த உணவு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

by Swathi   on 18 Jan 2018  0 Comments
Tags: பொங்கல் விழா   துபாய்   Galatta Kudumbam   Dubai Pongal Vizha   முஸ்ரிப் பூங்கா   கலாட்டா குடும்பம்     
 தொடர்புடையவை-Related Articles
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
இனி துபாயில் தமிழிலும் ஓட்டுநர் உரிமத் தேர்வு எழுதலாம் !! இனி துபாயில் தமிழிலும் ஓட்டுநர் உரிமத் தேர்வு எழுதலாம் !!
தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி. தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி.
துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் தான் முதலிடம் !! துபாயில் சொத்துக்கள் வாங்குவதில் இந்தியர்கள் தான் முதலிடம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.