LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

காந்தி

ஆணின் துணையாக விளங்கும் பெண் , ஆணைப் போன்றே

எல்லா வித திறமைகளையும் கொண்டுள்ளார் .

மனிதனின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விசயங்களிலும் பங்கேற்க

அவளுக்கு உரிமை உண்டு . அவனுடன் இணைந்து சுதந்திரம்

மற்றும் விடுதலையில் சம உரிமை அவளுக்கும் உண்டு .


விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என மகாத்மா காந்தி அன்புடன் அழைக்கப்படுகிறார் . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது இவருடைய பெயர் . இவர் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று பிறந்தார் . இவர் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் பட்டத்தை இங்கிலாந்து நாட்டில் பெற்றார் . சிறிது காலம் இந்தியாவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பின்பு தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார் . தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அவலங்கள் காந்தியை ஒரு அரசியல் சக்தியாக உருவாக்கியது . தென்னாப்பிரிக்காவில் 1894 இல் நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி வழி நடத்தினார் . பின்னர் இந்தியா திரும்பிய காந்தி , இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார் .

உப்பு சத்தியாக்கிரகம் என்று அழைக்கப்பட்ட போராட்டம் இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு புதிய திருப்புமுனையாக மாறியது . அதன்பிறகு வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பங்கு வகித்தார் . இந்தியாவில் நடந்த பல்வேறு போராட்டத்தின் விளைவாக நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் அடைந்தது .1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று நாதுராம் கோட்ஸே என்பவனால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் . இந்நாளை இந்தியாவில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.