|
||||||||||||||||||
மட்டன் சொதி மற்றும் வறுவல்(Well Fryed Mutton ) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் -1/4 கி, சோம்பு -2 டேபிள்ஸ்பூன் மல்லி -2 டேபிள்ஸ்பூன் சி. வெங்காயம் -8, பச்சைமிளகாய் -2 புளி -சிறியது தேங்காய் -1 மூடி, பட்டை -ஒரு துண்டு, கிராம்பு -2 எலுமிச்சம்பழம் -ஒரு பகுதி சீரகம் -அரை டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் பொடி -அரை டேபிள்ஸ்பூன், மிளகு -அரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு -தேவையான அளவு. செய்முறை : 1.முதலில் குக்கரில் மட்டனை போடவும்.அதனுடன் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள்பொடி 3 கப் தண்ணீர் சேர்க்கவும்.6 விசில் வந்ததும் குக்கரை இறக்கவும். 2.குக்கர் ஆறியதும் மட்டன் தனியாகவும் வேக வைத்த தண்ணீர் தனியாகவும் பிரிக்கவும்.சொதி செய்வதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் மட்டும்தான் தேவைப்படும்.தேங்காயை துருவி முதல் பால் 1 கப் எடுக்கவும்.இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும். 3.வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும்.மிளகு, சீரகம், சோம்பு, மல்லி இவற்றை சேர்த்து அரைக்கவும்.கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். 4.எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அரை டேபிள்ஸ்பூன் சோம்பு தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.புளியை உருண்டையாக உருட்டி சொதியில் போடவும். பிறகுஉப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும்.இப்போது அடுப்பை நிறுத்தி சொதியை கீழே இறக்கவும்.முதல் தேங்காய்பாலை சொதியில் சேர்க்கவும்.ஆறியதும் எலுமிச்சம்பழம் பிழியவும். 5.கறி வறுவல்: மிளகு , சீரகம் , சோம்பு சேர்த்து அரைக்கவும்,பெரிய வெங்காயம்,தக்காளி நறுக்கி வதக்கவும்.தனியாக எடுத்து வைத்திருக்கும் கறியை போடவும். அரைத்த மசாலாவை போட்டு நன்றாக சுருள வறுத்து எடுக்கவும். |
||||||||||||||||||
by nandhini on 09 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|