LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

வெள்ளாடு .....

நீ வைத்திருப்பது

கசாப்புக்கடை

என்று தெரியாது

உன் மீது

நம்பிக்கை வைத்துவிட்ட

ஒரு வெள்ளாடு நான் ....


என்

தலை வெட்டப்படுகிற

இந்த நேரத்தில்

உன்னோடு பேசி

எதுவும்

நிகழ்ந்துவிடப் போவதில்லை .....


மரண

வாக்கு மூலங்கள்

எவையும்

மரணங்களை

தடுத்து நிறுத்தியதாய்

சரித்திரம் இல்லை .....


ஆனாலும்

இது ஒரு

தர்மம் அவ்வளவுதான் .....


நீதிக்குரியவன்

தோற்றாலும்

நீதி தோற்காது

என்பதன்

அறைகூவல் அவ்வளவுதான் .....


நிச்சயம்

நீ

உன் கத்தியை

கீலே வைப்பதாய் இல்லை .....


உன் வாசலில்

விருந்தாளி

காத்திருக்கிறான் ....


என்

உயிர் போவதில்

உன்னைவிட

அவனுக்கு ஆனந்தம் ...


அவனது

பசப்பு வார்த்தைகளில்

உன் அறிவு

மங்கிக்கிடக்கிறது ....


சுய சிந்தனைத்திறன்

முழுவதும்

இழந்துவிட்ட உன்னிடம்

பேசி என்ன

நிகழ்ந்துவிடப் போகிறது ....


ஆனலும்

இது ஒரு

தர்மம் அவ்வளவுதான் ....


உனக்கு

ஒரு விசயம்

புரியவில்லை ...


அறிவில்லா

ஆசைகளின்

அடிமை நீ இப்போது ....


நீ

கொய்யாப்போவது

என் தலை அல்ல....


அது

சிறிதளவும்

மாசுபடாத

உன் மீது

நான் கொண்ட

நம்பிக்கை .....


நான்

மாளப் போவது

பற்றி சிறிதும்

கவலையில்லை எனக்கு ......


அது

காலத்தின் கட்டாயம் ....


நிகழ்த்திவிட்டுப்

போ ....


ஆனால்

இதே காலம்

உன்னை ஒருநாள்

குற்றவாளிக் கூண்டில்

நிறுத்தும் .....


அது

என்னைப்போல்

ஈனஸ்வரத்தில்

உன்னிடம்

நியாயம் கேட்டுக்கொண்டிருக்காது ......


பொறுத்திருந்து

நிதானமாய்

நிச்சயமாய்

உன்னை

உன் மனட்சாட்சிக்கு முன்

மண்டியிட வைக்கும் .....


எந்த வகையிலும்

நீ தப்பமுடியாதபடி

உன்னை

நிராயுதபாணியாக்கும் ...


உன் கத்தி

என் தலையை

நெருங்கிவிட்ட

வேளையில்

உனக்கொன்றை

சொல்லிவிட்டுச் சாகிறேன் ....


நீ

உன் தவறை

உணர்கிறபோது

நிச்சயம்

வீழ்ந்த என் தலை

என்னோடு ஒட்டிகொண்டு விடாது ....


வீழ்ந்தது

என் தலையல்ல ...


அது

சிறிதளவும்

மாசுபடாத

உன்மீது

நான் கொண்ட நம்பிக்கை ......

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.