LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

தெய்வப் பாடல்கள் - ஞானப் பாடல்கள் பகுதி - 1

 

1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு
 
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. 2
2. ஜய பேரிகை
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!
1. பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்  (ஜய பேரிகை)
2. இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்   (ஜய பேரிகை)
3. காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.  (ஜய பேரிகை)
3. சிட்டுக் குருவியைப் போலே
 
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.  (விட்டு)
4. விடுதலை வேண்டும். ராகம்-நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!
சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி)
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி)
5. மனத்தில் உறுதி வேண்டும்.
 
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்  1
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.  2
6. ஆத்ம ஜயம்
 
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!  1
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?  2
7. காலனுக்கு உரைத்தல்
 
ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி
பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
2. ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
8. மாயையைப் பழித்தல்
 
ராகம்-காம்போதி  தாளம்-ஆதி
1. உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!
2. எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!
3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!
5. இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!
6. நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
7. என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!
8. யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
9. சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4
10. அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?  1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?  2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  3
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.  4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.  5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.  6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?  7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?  8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?  9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.  10
11. பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே 
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.
தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!
12. பொய்யோ?மெய்யோ? (உலகத்தை நோக்கி வினவுதல்)
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.  4
13. நான்
இரட்டைக் குறள் வெண் செந்துறை
 
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்  1
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,  2
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான், 3
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான். 6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான். 7

1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. 2
2. ஜய பேரிகை
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!ஜய பேரிகை கொட்டடா!
1. பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்  (ஜய பேரிகை)
2. இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளிஇன்னமு தினைக்கண்டு களித்தோம்;கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்   (ஜய பேரிகை)
3. காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களி யாட்டம்.  (ஜய பேரிகை)
3. சிட்டுக் குருவியைப் போலே பல்லவிவிட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்1. எட்டு திசையும் பறந்து திரிகுவைஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவைமட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுபீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டுமுட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்திமுந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டுமற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.  (விட்டு)
4. விடுதலை வேண்டும். ராகம்-நாட்டை
பல்லவிவேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!
சரணங்கள்தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவநீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேரவருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி)
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ளவண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி)
5. மனத்தில் உறுதி வேண்டும். மனதி லுறுதி வேண்டும்.வாக்கினி லேயினிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்  1
கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்.பெண் விடுதலை வேண்டும்.பெரிய கடவுள் காக்க வேண்டும்;மண்பயனுற வேண்டும்,வாகனமிங்கு தென்பட வேண்டும்.உண்மை நின்றிட வேண்டும்.ஓம் ஓம் ஓம் ஓம்.  2
6. ஆத்ம ஜயம் கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்கவர்ந்திட மாட்டாவோ?-அடமண்ணில் தெரியுது வானம்,அதுநம்வசப்பட லாகாதோ?எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ,விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்மேவு பராசக்தியே!  1
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்எத்தனை மேன்மைகளோ!தன்னை வென்றா லவை யாவும் பெறுவதுசத்திய மாகுமென்றேமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்முற்றுமுணர்ந்த பின்னும்தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்குதாழ்வுற்று நிற்போமோ?  2
7. காலனுக்கு உரைத்தல் ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி
பல்லவிகாலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்லவேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
2. ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தனதாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரிநாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
8. மாயையைப் பழித்தல் ராகம்-காம்போதி  தாளம்-ஆதி
1. உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?மாயையே!-மனத்திண்மையுள்ளாரை நீ செய்வதுமொன்றுண்டோ!-மாயையே!
2. எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்மாயையே! நீசித்தத் தெளிவெனுந் தீயின்முன்நிற்பாயோ?-மாயையே!
3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட மாயையே!-நான்உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டுமாயையே!-இந்தத்தேகம் பொய் யென்றுணர் துரரை யென்செய்வாய் மாயையே!
5. இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்பமாயையே!-தெளிந்தொருமை கண்டோர் முன்னம் ஓடாதுநிற்பையோ?-மாயையே!
6. நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோமாயையே-சிங்கம்நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை-மாயையே!
7. என்னிச்சை கொண்டுனை யெற்றிவிடவல்லேன் மாயையே!-இனிஉன்னிச்சை கொண்டெனக் கொன்றும்வராது காண்-மாயையே!
8. யார்க்கும் குடியல்லேன் யானென்பதோர்ந்தனன் மாயையே!-உன்தன்போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்உன்னை-மாயையே!
9. சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தேஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4
10. அறிவே தெய்வம்
கண்ணிகள்ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள்!-பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ?  1
மாடனைக் காடனை வேடனைப் போற்றிமயங்கும் மதியிலிகாள்!-எதனூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்றோதி யறியீரோ?  2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ?-பலபித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ?  3
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்றுவேதம் புகன்றிடுமே-ஆங்கோர்வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்வேத மறியாதே.  4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்றுநான்மறை கூறிடுமே-ஆங்கோர்நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்நான்மறை கண்டிலதே.  5
போந்த நிலைகள் பலவும் பராசக்திபூணு நிலையாமே-உபசாந்த நிலையேவேதாந்த நிலையென்றுசான்றவர் கண்டனரே.  6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்றுகாட்டும் மறைகளெல்லாம்-நீவிர்அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்குஅவங்கள் புரிவீரோ?  7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகிஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,கொள்ளற் கரிய பிரமமென் றேமறைகூவுதல் கேளீரோ?  8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்துவெறுங் கதைகள் சேர்த்துப்-பலகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ?  9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்உணர்வெனும் வேதமெலாம்-என்றும்ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்உணர்வெனக் கொள்வாயே.  10
11. பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே 
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.
தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவேதங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறியவல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநினதுள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கேவேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தேபொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!
12. பொய்யோ?மெய்யோ? (உலகத்தை நோக்கி வினவுதல்)
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லைகாண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.  4
13. நான்
இரட்டைக் குறள் வெண் செந்துறை வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான்  1
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,  2
கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் வியக்கின்ற மாட கூடம்எழில்நகர் கோபுரம் யாவுமே நான், 3
இன்னிசை மாதரிசையுளேன் நான்,இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,கண்டல் சக்திக் கணமெலாம் நான்காரணமாகிக் கதித்துளோன் நான். 6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்அறிவாய் விளங்குமுதற்சோதி நான். 7

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.