விஜய் மில்டன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான கோலிசோடா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அந்த திரைப்படம், விரைவில் நடைபெறவிருக்கும் தென் கொரியா நாட்டின் புசான் உலக திரைப்பட விழாவில் 'கோலிசோடா’ திரையிடப்பட உள்ளது.
இது குறித்து அந்த படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியதாவது, இந்த விழாவில் கலந்து கொண்டதற்கு முழு பொறுப்பு விக்ரம்தான். அவரால் தான் கோலிசோடா திரைப்படம் புசான் (Busan) திரைப்பட விழாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அவரது முழு பங்களிப்பால் மட்டுமே இது சாத்தியம். அவருக்கு எனது நன்றிகள் என நெகிழ்ந்துள்ளார்
விஜய் மில்டன் தற்போது, விக்ரமை வைத்து ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|