கர்நாடக மாநிலம், உடுப்பியை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் கோபால் கார்வி, இவர் தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். அத்துடன் சாகச நீச்சல் பயணம் மேற்கொண்டு, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். ஆனாலும் இவரது சாதனையின் தாகம் அடங்கவில்லை, மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவது, இவரது நீண்ட கால லட்சியமாக இருந்தது. இந்நிலையில், உடுப்பி அருகே, அரபிக்கடலில் உள்ள செயின்ட மேரி தீவில், இவரது சாதனை முயற்சி சமீபத்தில் நடந்தது. இதில் கோபால் கார்வியின் இரண்டு கைகளும் விலங்கிடப்பட்டு, இரும்பு சங்கிலியால் காலில் இணைக்கப்பட்டு இருந்த நிலையில், செயின்ட் மேரி தீவிலிருந்து, மால்பீ பீச்சுக்கு, 3.07 கி.மீ., தூரத்தை, மூன்று மணி நேரத்திற்கும் குறைவாக கடந்து, கின்னஸ் சாதனை படைத்தார். ஆர்ப்பரிக்கும் கடல் அலையில், காலையில், 7:37 மணிக்கு நீச்சலை துவக்கியவர், காலை, 10:20 மணிக்கு முடித்தார். இது புது சாதனை முயற்சி என, லண்டன் கின்னஸ் சாதனை புத்தகத்தின், நடுவர் பிரவீன் பாடீல் கூறியுள்ளார்.
|