டீசல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாயும், சமையல் கேஸ் விலை, சிலிண்டருக்கு 10 ரூபாயும் மாதம்தோறும் உயர்த்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மத்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் மானியத்தை முழுமையாக நிறுத்த முயற்சித்து வருகிறது. இதற்காகதான் மாதம் தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையில் விலை உயர்வு காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்துள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 11 இழப்பு ஏற்படுவதாகவும், அது போல சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ. 555 வரை இழப்பு ஏற்படுவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்தனை அடுத்து டீசல் விலையையும், கேஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்த மத்திய அரசுடன் எண்ணெய் நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|