LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சி.பி.ஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு சம்மதம் !

நிலக்கரி சுரங்க ஊழல் புகாரை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சி.பி.ஐ யின் விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சராக இருந்த, அஸ்வனி குமார் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் திருத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது சி.பி.ஐ., இயக்குனரும் இதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து "சி.பி.ஐ அமைப்பிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து சி.பி.ஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை குழு உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது 41 பக்க ஆய்வு அறிக்கையை நேற்று சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்தது. அதன் படி சி.பி.ஐ அமைப்புக்கு தனாட்சி அதிகாரம் வழங்கப்படும். மேலும் சி.பி.ஐ இயக்குனரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தான் தேர்வு செய்யும். சி.பி.ஐ இயக்குனர் மீதான புகார் உண்மையென, மத்திய லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து, அதை ஜனாதிபதி ஏற்றால் மட்டுமே, சி.பி.ஐ இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்படுவார்.அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச வழக்குகளில் விசாரணை நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் போன்ற முக்கிய அம்சங்களை சுப்ரீம் கோர்டில் மத்தியக்குழு பரிந்துரைத்தது.

by Swathi   on 03 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.