LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

சென்னையில் பிறந்த பெண்ணுக்கு கிராமி விருது

 

உலகெங்கும் உள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் 2025- ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், தொகுப்பு, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற தொகுப்பாக Beyoncé-ன் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.


இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக ‘Best New Age Album’ என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “இசை என்பது காதல், இசை என்பது ஒளி, இசை என்பது சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் எப்போதும்  சூழப்பட்டிருப்போம். இசையை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் அவர். 


70 வயது சந்திரிகா டாண்டன் சென்னையில் பிறந்தவர். இங்குள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்றிருக்கிறார். தற்போது  அமெரிக்காவில் தொழிலதிபராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். பெர்க்லீ இசைக்கல்லூரியின் முதல்வருக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
இந்துஸ்தானி மற்றும் கர்நாடகம் மேற்கத்திய பாரம்பரியங்களில்  பயிற்சி பெற்றவர். உலக அரங்கில் பல இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். இரண்டு முறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர் இம்முறை விருதை வென்று அசத்தியிருக்கிறார்.


 

 

by hemavathi   on 03 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்! இளையராஜா அவர்களின் சிம்பொனி 2025 இசைக்கோர்வை அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்!
மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பணி அதிகாரியாகிச் சாதித்த திண்டுக்கல் தமிழ் ஓவியா
புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது புதுச்சேரி தவில் இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.