|
|||||
சென்னையில் பிறந்த பெண்ணுக்கு கிராமி விருது |
|||||
உலகெங்கும் உள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025- ஆம் ஆண்டிற்கான 67வது ‘கிராமி விருதுகள்’ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த பாடல், தொகுப்பு, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, சிறந்த நாட்டுப்புற தொகுப்பாக Beyoncé-ன் கவ்பாய் கார்ட்டர் பாடல் தேர்வானது. அதிகபட்சமாக ‘Not Like Us’ பாடல் மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.
இதில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சந்திரிகா கிருஷ்ணமூர்த்தி டாண்டன் ‘த்ருவேனி’ என்ற பாடலுக்காக ‘Best New Age Album’ என்ற பிரிவில் விருது வென்றிருக்கிறார். பலரும் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “இசை என்பது காதல், இசை என்பது ஒளி, இசை என்பது சிரிப்பு. நாம் அனைவரும் அன்பு, ஒளி மற்றும் சிரிப்பால் எப்போதும் சூழப்பட்டிருப்போம். இசையை உருவாக்கும் அனைவருக்கும் நன்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் அவர்.
70 வயது சந்திரிகா டாண்டன் சென்னையில் பிறந்தவர். இங்குள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்றிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராகவும், இசைக்கலைஞராகவும் இருக்கிறார். பெர்க்லீ இசைக்கல்லூரியின் முதல்வருக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
இந்துஸ்தானி மற்றும் கர்நாடகம் மேற்கத்திய பாரம்பரியங்களில் பயிற்சி பெற்றவர். உலக அரங்கில் பல இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார். இரண்டு முறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர் இம்முறை விருதை வென்று அசத்தியிருக்கிறார்.
|
|||||
by hemavathi on 03 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|