25 லட்சம் சதுரடி பரப்பளவில், 1,600 கோடி ரூபாய் செலவில், மூன்று தளங்களுடன், நாட்டிலேயே பிரம்மாண்டமான வணிக வளாகம் கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள எடப்பள்ளி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. 9 தியேட்டர்கள், பொழுதுபோக்கு மையங்கள், ஆடைகள் மற்றும் நகைகள், மின்னணுச்சாதனங்கள், போன்ற பொருள்களை விற்பனை செய்யும் 360க்கும் மேற்பட்ட கடைகள்; 420 அறைகளைக்கொண்ட 5 நட்சத்திர உணவு விடுதி; ஆகியவை இதில் உள்ளன. 6 மணி நேரத்தில், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர். திறப்பு விழாவின் போது, 6 மொபைல் போன்கள், 1 கேமரா, சில நகைகள் மற்றும், 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய, பெண் ஒருவரையும், போலீசார் கைது செய்தனர்.
|