LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- தமிழ் பரம்பரை

பெருங்கவிக்கோ வா மு. சேதுராமன் மறைந்தார்.. எமது அஞ்சலி..

முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர்   பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள்   4-07-25  வெள்ளிக்கிழமை  இரவு 8.15 க்கு இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சியான செய்தியை நம்பமுடியவில்லை. 


பன்னாட்டு தமிழுறவு மன்றம் அமைப்பு கட்டி, தமிழ்ப்பணி இதழ் நடத்தி, பல நூல்களை எழுதி, பல பரப்புரை பயணங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்  மேற்கொண்டு தொடர்ந்து ஆழமாகத் தமிழ் பரப்புரையாளராகச் செயல்பட்டு வந்தவர்.  தமிழ் சார்ந்து தொடர்ந்து சிந்தித்து, செயல்பட்டு வந்த தமிழ் உணர்வு மிக்க முன்னோடி .  உலகின் பல நாடுகளுக்குப்  பயணித்து தமிழ்ச்சங்கங்களைச் சந்தித்து, அந்தந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் நிலையை அறிந்து ஆவணப்படுத்தி வந்தவர் 

தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்த உணர்வாளர். 
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த ஆளுமை.

அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் - உறவினர்கள் - தமிழ்கூறு நல்லுலகின் சான்றோர்கள் - தமிழ்த் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைப்பேசியை மறவாமல் வைத்திருப்பார். நினைவாற்றல் மிகுந்தவர். திடீரென அழைப்பு வரும்... நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார். தமிழ்ப்பணிகளைப் பாராட்டுவார்.  குடும்பத்தைப் பற்றி விரிவாகக் கேட்டறிவார். கடைசியாக  சென்னை புத்தகத்தைத் திருவிழாவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் பேசி அவரது உலகத் தமிழ்ப்  பயண அனுபவங்களை ஆவணப்படுத்தவேண்டும் என்ற சிந்தனை இருந்தது. பேரன்பு கொண்ட பெருமகனார் மறைந்த செய்தி பேரதிர்ச்சியாக உள்ளது. 

முதுபெரும் தமிழரின் இழப்பு தமிழ்கூறு நல்லுலகுக்கு பேரிழப்பு!



வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி


by hemavathi   on 04 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல்  பவுடர்  - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை மக்களை வசீகரித்த கோகுல் சாண்டல் பவுடர் - கும்பகோணம் டி.எஸ்.ஆர் அன் கோவின் கதை
இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு இந்திய பார் கவுன்சில் தலைவராக மீண்டும் தமிழர் தேர்வு
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ  காலமானார் முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ காலமானார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது
உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர் உலகக்கோப்பை போட்டிக்கான தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட அணியில் தமிழக வீரர்
கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி  தேர்வு கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்த சங்கரி தேர்வு
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப்  புகழ் வணக்கம்  - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு ஏரிகளைச் சீரமைத்து வரும் இளைஞர் நிமல் ராகவனுக்கு முதலமைச்சர் பாராட்டு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.