எள் மற்றும் கடலை தட்டுப்பாட்டால்விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெரும்பாலான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் விருதுநகரில் இருப்பதால் அங்குள்ள மார்க்கெட்டில் ஒவ்வொரு வாரமும் எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்படும்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகின்றது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த மாதம் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195 ஆக இருந்தது. ஆனால் இந்த மாதம் 55 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டரின் விலை ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த மாதம் கடலை எண்ணெயின் விலை லிட்டருக்கு ரூ.123 ஆக இருந்தது. ஆனால் இந்த மாதம் 17 ரூபாய் உயர்ந்து லிட்டர் ரூ.140 ஆக விற்கப்படுகின்றது. பாமாயில் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு 69 ரூபாயாக விற்கப்படுகிறது.
தயாரிப்பு மூல பொருட்களான எள், மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் பற்றாக்குறையே இந்த விலை உயர்விற்கு காரணம் என எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மூலப்பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், எள் மற்றும் நிலக்கடலையின் வரத்து குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதே நிலை நீடித்தால் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.
|