|
||||||||
ஞானக்குறள்-திருவருட்பால்-சிவயோக நிலை |
||||||||
அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல். 251
உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி
விண்ணோடு மெள்ள விடு. 252
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து. 253
இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம் பத்தாறு புகும். 254
கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான். 255
முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. 256
ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல். 257
வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை
ஈசன்றன் வாசலி லேற்று. 258
தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். 259
ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப்
பேதியா தோது பிணை. 260
அடிமிசை வாயு வடுத்தடுத் தேகிமுடிமிசை யோடி முயல். 251 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|