|
||||||||
ஞானக்குறள்-வீட்டுனெறிப்பால்-உள்ளுணர்வு |
||||||||
எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு. 81
பல்லூழி காலம் பயின்றனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம். 82
எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான். 83
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். 84
காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல். 85
பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல். 86
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். 87
ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு. 88
ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம். 89
காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன். 90
|
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|