LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இதயத்தில் ரத்தக்கசிவு நோய்: சிறுமியைக் காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவர்கள் சாதனை!

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இதயத்தில் ரத்தக்கசிவை ஏற்படுத்தி உயிரைப் பறிக்கும், ‘ருமாட்டிக்’ நோயுடன் வந்த சிறுமியை உயிர் பிழைக்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை  புரிந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், நெமிலி தாலுகா, பாளையமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளி(27). இவர்களது மகள் யோகா(11), பாணாவரம்  அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.

 கடந்த 1ம் தேதி கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டாள்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி யோகா, ‘ருமாட்டிக்’ காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 

நோய் முற்றிய நிலையில் இதய வால்வுகளில் வீக்கமும், சுருக்கமும்  மாறி, மாறி ஏற்பட்டு ரத்தக்கசிவுடன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையிலும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டாள்.

தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு நிபுணரான டாக்டர் தேரணிராஜன் தலைமையில் மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை  மேற்கொண்டனர்.

எந்த மருந்தையும் உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சென்னையில் இருந்து உயர்தர சிறப்பு மருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தொடர் கண்காணிப்புடன் ஒருவார சிகிச்சையில் சிறுமி பூரணமாக குணமடைந்தாள். உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கைவிடப்பட்ட தங்கள் மகளை காப்பாற்றிய அரசு டாக்டர்களுக்கு  சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனையில் இத்தகைய சிகிச்சைக்கு ₹1.5 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

by Mani Bharathi   on 10 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.