|
|||||
கனமழை பீதியில் கேரள மாநில மக்கள்! |
|||||
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கேரள மாநில மக்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டிய கனமழை பாதிப்பில் இருந்து கேரள மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள கனமழை அவர்களை நடுங்க வைத்துள்ளது. இடுக்கி, திருச்சூர், மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கடந்த மழையின் போதும் இந்த மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் அரசு முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடலோரங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண முகாம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. கேரளாவில் கடந்த தென்மேற்கு பருவமழையின் போதே அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகளில் இருந்து கணிசமான அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
|||||
by Mani Bharathi on 05 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|