தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் தீவிரமாக பெய்து வருகிறது. இதனை அடுத்து இமாசலப்பிரதேசம், உத்தரகண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர், 50 க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளனர். மழை வெள்ளத்தில் மட்டிகொண்டவர்களை மீட்க இராணுவத்தினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
|