LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ஹெலன் கெல்லர்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல .

தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை .


கண்கள் தெரியாது , காது கேளாது , வாய் பேச முடியாது என மூன்று குறைபாடுகளுடைய ஒருவர் உலகளவில் பிரபலம் அடைந்தார் என்றால் அது ஹெலன் கெல்லர் (Helen Kellar ) என்னும் பெண்மணியைச் சேரும் . உலகில் பட்டப்படிப்பை முடித்த முதல் பார்வையற்றவர் ஹெலன் கெல்லர் ஆவார் . இவர் 1880 ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று அமெரிக்காவில் உள்ள டாஸ்காம்பியா என்னும் ஊரில் பிறந்தார் .19 மாதக் குழந்தையாக இருக்கும்போது பேசும் தன்மையையும் , கேட்கும் தன்மையையும் , பார்க்கும் தன்மையையும் இழந்தார் . ஆணி சல்விவன் என்கிற ஆசிரியையின் உதவியால் படிக்கக் கற்றுக்கொண்டார் . பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொண்டார் . தொடுதல் புரிதல் வகையில் ஹெலனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார் . அடுத்தவர் பேசுவதை தொடுதல் முறையில் புரிந்துகொள்வதை ஆணி கற்றுக்கொடுத்தார் .

அடுத்தவர் பேசும்மொழி என்ன என்பதை தொண்டைக்குழியில் கையை வைத்தே கண்டுபிடித்தார் . அவர் தனது பட்டப்படிப்பை 24 வயதில் முடித்தார் . ஹெலன் பொதுவுடைமைவாதியாக மாறினார் . பெண்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடினார் . அவர் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார் . அரசியலிலும் ஈடுபட்டார் . அவர் 12 புத்தகங்களை எழுதினார் . என் கதை என்கிற புத்தகம் உலகப் புகழ்பெற்றது . அவர் பேசக் கற்றுக்கொண்டு , உலகம் முழுவதும் சென்று சொற்பொழிவு ஆற்றினார் . சமூக சேவையிலும் ஈடுபட்டார் . விடாமுயற்சியாலும் , தன்னம்பிக்கையாலும் ஒருவர் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் 1968 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.