LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதி செய்யும் ஏற்பாடு!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, லிப்ட், சாய்வு தளம், கழிப்பறை அமைக்கும் பணியை டிச.31ம் தேதிக்குள் முடிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்  சிறியதும், பெரியதுமாக 44 ஆயிரம் அரசு கட்டிடங்கள் உள்ளது. இதில் பெரும்பாலான அலுவலகங்களில் சாய்வுதளம், லிப்ட், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால்  மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லவே கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். 

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதியாக சாய்வுதளம்,  லிப்ட், மாற்றுத்திறனாளிகளுக்கென கழிப்பறை வசதி கட்டாயம் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு குறித்து பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு தமிழக  அரசு கடிதம் எழுதியது.

இதைத் தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் மனோகரன், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாத கட்டிடங்களை கண்டறிய அறிவுரை வழங்கினார். 

அதன் பேரில்  எழிலக வளகத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் லிப்ட், சாய்வுதளம், கழிப்பறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை டிசம்பர் 31ம் தேதிக்குள்  முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

 இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய அரசு அலுவலக கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் செய்து  தரப்படுகிறது. பழைய கட்டிடங்களில் பெரும்பாலானவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் இல்லை. அந்த கட்டிடங்களில் லிப்ட், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. 

வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சாய்வுதளம், லிப்ட், கழிப்பறை அமைக்கும் பணிகள் முழுவதுமாக முடிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 29 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.