LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

சரஸ்வதி பூஜை

 

சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.
அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம்.
சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.
படைக்கவேண்டியவை:
சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் 
வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.
நமது வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார். எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட 
கலைகளுக்கான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம். நாம் பயன்படுத்தும் கருவிகளை தூய்மை படுத்தி ஆயுத பூசை கொண்டாடுகிறோம். இதுவே நவராத்திரி, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை ஆகிய 
பண்டிகைகளின் ஆன்மீக அடிப்படையாகும்.
கலைமகளாம் சரஸ்வதி: பாற்கடலில் கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம், உச்சை சிரவசு எனும் தெய்வக்குதிரை போன்ற அரியப் பொருட்கள் தோன்றின. மேலும் இந்தப் பாற்கடலில் இருந்தே 
திருமகள், இந்திராணி, கலைமகளாம் சரஸ்வதி ஆகியோர் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இப்படி பாற்கடலில் பிறந்து சத்திய லோகத்தில் பிரம்மனுடன் சேர்ந்து வேதநாதமாய்த் திகழும் கலைமகளின் புண்ணியத் திருநாளான சரஸ்வதி பூஜையன்று விரதமிருந்து பூஜிக்க சர்வ சித்திகளையும், 
கலைகளையும் ஒருங்கேப் பெற்றுவிடலாம்.
புரட்டாசி மாதத்தில் வரும் பிரதமை முதல் தசமி வரையிலும் உள்ள 9 நாட்கள் சக்திக்குரிய திருநாட்களாகும். இதில் இறுதிநாளான விஜயதசமிக்கு முன் தினம் நவமியன்று சகலகலாவல்லியாம் 
சரஸ்வதியை பூஜித்தல் வெகுசிறப்பு.

     சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம்.சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்பட வே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இ‌டவு‌ம். பட‌த்‌தி‌ற்கு பூ‌க்க‌ள் வை‌த்து அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம்.

 

படைக்கவேண்டியவை:

 

     சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவ‌ற்றை கலைவாணிக்கு நைவேத்தியங்களாகப் படைக்கலாம். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும்.நமது வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார்.

 

     எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம். நாம் பயன்படுத்தும் கருவிகளை தூய்மை படுத்தி ஆயுத பூசை கொண்டாடுகிறோம். இதுவே நவராத்திரி, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை ஆகிய பண்டிகைகளின் ஆன்மீக அடிப்படையாகும்.

 

கலைமகளாம் சரஸ்வதி:

 

     பாற்கடலில் கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம், உச்சை சிரவசு எனும் தெய்வக்குதிரை போன்ற அரியப் பொருட்கள் தோன்றின. மேலும் இந்தப் பாற்கடலில் இருந்தே திருமகள், இந்திராணி, கலைமகளாம் சரஸ்வதி ஆகியோர் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.இப்படி பாற்கடலில் பிறந்து சத்திய லோகத்தில் பிரம்மனுடன் சேர்ந்து வேதநாதமாய்த் திகழும் கலைமகளின் புண்ணியத் திருநாளான சரஸ்வதி பூஜையன்று விரதமிருந்து பூஜிக்க சர்வ சித்திகளையும், கலைகளையும் ஒருங்கேப் பெற்றுவிடலாம்.

 

     புரட்டாசி மாதத்தில் வரும் பிரதமை முதல் தசமி வரையிலும் உள்ள 9 நாட்கள் சக்திக்குரிய திருநாட்களாகும். இதில் இறுதிநாளான விஜயதசமிக்கு முன் தினம் நவமியன்று சகலகலாவல்லியாம் சரஸ்வதியை பூஜித்தல் வெகுசிறப்பு.

by Swathi   on 10 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.