தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக இருந்து பிசியான ஹீரோவாக வலம் வருகின்றனர் விஜய் ஆண்டனியும், ஜி.வி.பிரகாஷும். தற்போது இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார், ஹிப் ஆப் தமிழா ஆதி. சமீபத்தில் நடந்த ‘ஆம்பள’ வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இயக்குனர் சுந்தர்.சி இதனை தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘ஆம்பள’ படத்தின் வெற்றிக்கு ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம். இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் என்னுடைய சொந்த பேனரில் அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று கூறினார்.
ஹிப் ஆப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு, பல்வேறு ஆல்பங்களில் பாடி, நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|