LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !!

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவான பிரமாண்ட படங்கள் என்றாலே, அந்த படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு, ஹாலிவுட் பிரபலங்கள் வருகை கண்டிப்பாக இருக்கும். 


அப்படி அவர்கள் வரும் போது, அவர்களால் ஏற்படும் சிறு சிறு சம்பவங்கள் கூட காலம் கடந்து பேசக்கூடியதாக மாறிவிடுகிறது. 


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தசாவதாரம், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஜாக்கிஜானும், நேற்று முன் தினம் நடைபெற்ற ஐ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அர்னால்டும் தமிழ் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஒரு சில நல்ல விசயங்களை கற்றுக் கொடுத்து சென்றிருக்கிறார்கள். 


அவற்றை பற்றி இங்கு விரிவாக காண்போம், 


தூய்மையை வலியுறுத்திய ஜாக்கிசான் :


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற போது அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். 


இசை வெளியீட்டு விழா மேடையில் ஆடியோ கேசட் சுற்றப்பட்டிருந்த பேப்பரை கிழித்து அப்படியே மேடையிலேயே போட்டு விட்டார்கள். யாருமே அதைக் கண்டு கொள்ளாமல் புகைப்படம் மற்றும் வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் ஜாக்கிசான் அந்தக் குப்பைகளைப் பொறுக்கி எடுத்து அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போடுவதற்கு நடந்து சென்றார். 


உடனே சுற்றிருந்தவர்கள் சுதாரித்து அவரிடம் இருந்த பேப்பரை வாங்கி அருகில் உள்ள உதவியாளர் ஒருவரிடம் கொடுத்தனர். பிறகு, ஜாக்கிசான் இசை வெளியீட்டு விழாவிற்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தாலும், குப்பைப் பேப்பரை வாங்கிச் சென்ற அந்த உதவியாளர் சரியாக குப்பைத் தொட்டியில் போடுகிறாரா என்பதைப் பார்த்து கொண்டே இருந்தார். 'தசாவதாரம்' இசை வெளியீட்டு விழாவில் இது மிகப்பெரிய விஷயமாக பேசப்பட்டது.  


நேரம் தவறாமையை பின்பற்றிய அர்னால்ட் :


இதேபோல ஆஸ்கார் ரவிச்சந்திரனின் மற்றொரு பிரமாண்டமான படைப்பான 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பங்கேற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தமிழ் சினிமா உலகிற்கு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் நேரம் தவறாமையின் அவசியம்.

 

ஐ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க பிற்பகல் 3:30 மணியில் இருந்து 5:30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என்று டிக்கெட்களில் போடப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது மணி 7:30-யைத் தாண்டிவிட்டது. 


நிகழ்ச்சியை உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருந்த அர்னால்டு முன்பு பாடி பில்ட் ஷோ நடைபெற்றது. பாடி பில்டர்கள் அர்னால்டுக்கு மரியாதை செய்தார்கள். அப்போது, அவர்களோடு இணைந்து மேடையேறிய அர்னால்டு, தனது பேச்சைத் தொடங்கி முடித்து அரங்கினை விட்டு வெளியேறினார். 


இசையை வெளியிடுவதற்கு முன்பே அர்னால்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது, விழா ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


'தசாவதாரம்' இசை வெளியீட்டில் தூய்மையையும் எளிமையையும் கற்றுக் கொடுத்தார் ஜாக்கிசான், 'ஐ' இசை வெளியீட்டு விழாவில் 'காலம் தவறாமை'யை கற்றுக் கொடுத்திருக்கிறார் அர்னால்டு.  

by Swathi   on 17 Sep 2014  1 Comments
Tags: Arnold Schwarzenegger   Jackie Chan   ஜாக்கிசான்   அர்னால்ட்   தமிழ் சினிமா        
 தொடர்புடையவை-Related Articles
எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !! எந்திரன் 2-வில் வில்லனாகிறாராம் அர்னால்ட் !!
தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா.... தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
தமிழ் சினிமா வரலாற்றில் 12  மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல்  படம் நடு இரவு !! தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் நடு இரவு !!
தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !! தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !!
விக்ரமின் நடிப்பை பாராட்டிய அர்னால்டு !! விக்ரமின் நடிப்பை பாராட்டிய அர்னால்டு !!
சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு லிங்கா படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி !! சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு லிங்கா படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி !!
கருத்துகள்
17-Sep-2014 05:19:15 s.inbaraj said : Report Abuse
Thavirkka mudiyaatha unmai
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.