LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மருத்துவத்தை பயிலும் மாணவன் எப்படி இருக்க வேண்டும் ?

மாணவன் ஆசிரியர் மீது மிகுந்த பக்தி, தான் பயிலும் கல்வியின் மீது மிகுந்த ஆர்வத்தைக் கொண்டவனாகவும், புத்திசாலியாகவும், ஞாபக சக்தியை அபாரமாகக் கொண்டவனும், விஷய ஞானத்தில் தெளிவாக உள்ளவனும், முகம், மூக்கு, கண்கள் போன்றவை வளைவு ஏதுமில்லாமல் நேராக அமைந்தவனும், மெல்லிய மற்றும் நெய்ப்புடன் கூடிய நகங்களை உடையவனும், பார்ப்பதற்கு தேஜஸ்வியுடன் கூடியவனும், திருமணம் ஆகாத பிரம்மசாரியாகவும், சுகதுக்கம், விருப்பு வெறுப்பு போன்ற இரட்டை நிலைகளை வென்றவனும், தூய்மையான கருத்துக்களிலும், செயல்களிலும் ஆழ்ந்த பற்றுடையவனும், ஒழுக்கத்தை விடாது கடைபிடிப்பவனும், பயிலும் கல்வியை இறுதிவரை படிப்பவனும், குறைந்தது ஆறுமாதமாவது ஆசிரியர் பணிவிடையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவனும், தகாத செயல்களை செய்வதில் வெட்கப்படுபவனும், உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் சுத்தமானவனும், நல்ல குலத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஒரு மாணவன்தான் மருத்துவத்துறைக்கு சிறந்தவன் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. கூறுவதோடு மட்டுமில்லாமல் அக்காலத்தில் மேற்குறிப்பிட்ட லட்சணங்கள் அனைத்தும பூரணமாய் உடைய ஒருவனைத்தான் ஆயுர்வேத ஆசார்யர்கள் தங்களுடைய சிஷ்யனாக அங்கீகரித்தனர்.

இக்காலத்தில் இவை முழுவதுமாக சாத்யமில்லையென்றாலும், பணத்திற்காக மருத்துவத்துறையில் மாணவர் சேர்க்கை பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும். நோய்வாய்ப்பட்டவன் மருத்துவரை தெய்வமாகக் கருதுகிறான். ஆனால் மருத்துவரோ தான் செலவு செய்து படித்த பணத்தை திரும்பப் பெற தேவையில்லாத பரிசோதனைகளை செய்யச்சொல்லி நோயாளியிடமிருந்து பணத்தை பெறுவதற்கு முயற்சி செய்யலாம். அறுவை சிகித்ஸைகளை மேற்கொள்ளலாம். இதனால் நோய் மாராமல் வீண் செலவுகளை செய்து நோயாளிகள் துன்புறநேரிடும். அரசு இவ்விஷயத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் தற்சமயம் இருந்து வருகிறோம். பேராசிரியர், மருத்துவர் ஆகியோருடைய தனியார் மருத்துவக் கல்லூரியாயினும் சம்பள விகிதத்தை அரசே நிர்ணயித்து வழங்கினால் மருத்துவக்கல்லூரியை நடத்தும் நிர்வாகம் மாணவர் சேர்க்கையின் போது அதிக அளவில் பணம் வாங்கவேண்டிய வராது. தகுதியுள்ள மாணவனையும் தேர்ந்தெடுக்க முடியும். தரமான கல்வியையும் அவர்களுக்குத் தரமுடியும்.

by Swathi   on 10 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.