LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- ஏன்? எப்படி?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

 ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்

வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?


ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.

வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?

நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.

எங்கே விண்ணப்பிப்பது?

வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

1. இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்


2. வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்

எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.

ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.

விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?
விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.

எப்போது மறுக்கப்படும்?

இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.

இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)

இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.

எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.

ஒருவர் காணாமல் போயிருந்தால்..?

ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

 

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய

by Swathi   on 02 Jun 2016  32 Comments
Tags: வாரிசுச் சான்றிதழ்   Legal Heir Certificate   Apply Heir Certificate   Varisu Certificate Form   Apply Varisu Certificate   Varisu Sandrithal   Apply Varisu Sandrithal  
 தொடர்புடையவை-Related Articles
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
கருத்துகள்
10-Mar-2021 05:33:04 ranjani said : Report Abuse
sir, epoluthu en kanavarin periyappa oru will eluthu ullar athai nangal register pantrathukull kalamagi vitar, athargaka varis saandru tharamatirargal ena panalam
 
19-Feb-2021 09:54:13 karupasamy said : Report Abuse
vaaris cartificate
 
16-Feb-2021 05:58:01 sankari said : Report Abuse
sir varisu sanru appadi vinnappam sayivathu addipadi
 
12-Feb-2021 11:07:27 Elango said : Report Abuse
ஐயா எனது தாத்தா பெயரில் இடம் உள்ளது அவருக்கு இரண்டு மகன்கள் மட்டுமே அதில் இரண்டாவது மகன் இறந்து விட்டார் அவர் எனது தந்தை ஆவார்.அவருக்கு இரண்டு மகன்கள் மூன்று பெண் பிள்ளைகள் அதில் மூத்த மகன் மட்டும் இறந்து விட்டார் ஆனால் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவியும் உள்ளனர்.எனவே எனது தாத்தா பெயரில் உள்ள சொத்திற்கு அண்ணனின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வாரிசு ஆகி பங்கு பெற உரிமை உண்டா இல்லையா
 
08-Dec-2020 04:26:23 தமிழ் செல்வன் said : Report Abuse
அய்யா எனது பாட்டியின் தாயார் பெயரில் இப்பு சான்று வாங்கி விட்டேன்.இப்பொது பாட்டி பெயரில் வாரிசு சான்று வேண்டும்.பாட்டி உயிருடன் உள்ளார்.பாட்டிக்கு வயதன காரனத்தால் ஆதார் கார்டு எடுக்க முடிய வில்லை.தனி நபர் கார்டு எதும் இல்லை.வாரிசு சான்று பெற என்ன செய்வது அய்யா.
 
21-Aug-2020 11:18:43 arunkumar said : Report Abuse
ayya vanakkam. enathu thai iranthu 12 varudam agivittathu irappu mattrum vaarisu santrithal kalil amma name yasothai entru ullathu aanal veedu pathirathil yasotha yentru ullathu ipothu than nankal untha pathirathai parthom nangal yevvaru pathirathai yankal peyarukku matruvathu pls help sir
 
24-May-2020 12:57:26 A.sivakumar said : Report Abuse
Dear sir we are land purchase 2009 Registration now patta transfer apply VAO ask to varisu certificate and death certificate how to passable pls reply
 
09-Apr-2020 03:57:44 மாரிமுத்து said : Report Abuse
வாரிஸ் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்
 
10-Mar-2020 06:39:34 parvathi said : Report Abuse
good
 
02-Mar-2020 08:56:03 K . அருண் குமார் said : Report Abuse
சார் என்னை என் அப்பா தத்து எடுத்து வளர்த்தார்கள். அப்பாவோடு கூட 3 சகோதரர்கள், சொத்து 8 யாகேர் நிலம் உள்ளது அப்பாவோடு சேர்த்து 3 பேருக்கும். இந்நிலையியல் என் தாத்தா சொத்தினில் அப்பாவிற்கு பிறகு எனக்கு உரிமை உள்ளதா? என் சித்தப்பாமக்கள் என் அப்பாவிற்கு பின் எனக்கு சொத்து உரிமை கிடையாது என்று கூருகின்றனர். நான் வாரிசு என்று எப்படி நிரூபிக்கவேண்டும்? தயவு செயிது எனக்கு உதவுங்கள் அன்புடன் அருண் 9942888877
 
25-Nov-2019 13:32:10 Banumathi. S said : Report Abuse
Sir ennudaiya amma iranthu 5 mathangal akeyathu naan 4murai varisu certificate apply seithum avargal ungal ammavriku magan ullar endru reject seithu konday ullanar aanal naan enna ammavirku oray magal enathu appa seru vayathi en ammavai vittu sendru 2am thirumanam seithu vittar athanal en amma panjayathil vaithu en appa udan vala matten endru vanthu en paati veetil erappu kalam varai valthu vanthu ullar avaruku ethanai kulanthaikal avarkal uyir udan ullara illya enpathu engaluku theriyathu eppoluthu un appavirku 2am samsarathin kulanthaikal magan ullar endru enaku varisu thara marukendranar ethu sariyana muraiya endru sollunga sir pls
 
29-Oct-2019 17:42:20 Mohamed Esha said : Report Abuse
I have owned property from my mother, for legal clearance bank is asking legal heir certificate of whom your mother purchased the property? How will I get?
 
19-Sep-2019 13:54:13 ஷாகுல்ஹமீது said : Report Abuse
தந்தையின் பிள்ளைகள் நாங்கள் தான் வாரிசு சான்று பெற பல ஆண்டுகளுக்கு முன் காலம் சென்ற பாட்டா,பாட்டி இறப்பு சான்றிதழ் அல்லது நோட்டரி்பப்ளிக் உறுதி பத்திர சான்று கேட்கும் குமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் இல்லையெனில் மனுவை தள்ளுபடி செய்கிறார்.இது அரசு ஆணை என்கிறார்.
 
27-Aug-2019 05:01:54 Abinaya said : Report Abuse
வாரிசு certificate
 
26-Aug-2019 08:23:57 Afzal said : Report Abuse
Thank you for your information
 
14-Aug-2019 07:28:13 devi said : Report Abuse
ஐயா, என் மாமனார் இறந்து ஒரு வருடம் ஆகிறது அவருடை இறந்த சான்று இருக்கிறது . என் மாமியார் இறந்து 25 ஆண்டு ஆகிறது நோ செர்டிபிகேட் . என் கணவருக்கு கூட பிறந்தவர்கள் 7 பேர் . அதில் மூத்த அன்னான் இறந்து 15 ஆண்டு ஆகிறது நோ செர்டிபிக்டயே.இல்லை . 6 பேரில் 4 பெண்கள் திருமணம் ஆகி விட்டது . இறந்து ஆண்கள். இப்போது எங்கள் நிலம் பிரிக்க வேண்டும் என்ன செய்வது. அண்ணான் இப்போது எனக்கு நிலம் வேண்டாம் என்கிறார் அனா நாங்கள் வீடு காட்ட வேண்டும் என்ன செய்வது. இறந்தவரின் மனைவிக்கு 3 பெண்குழந்தைகள் திருமணம் ஆகி விட்டது . அவர் களுக்கு சொத்தில் உரிமை இருக்க அவ்வளவு இருக்கு.
 
29-Jul-2019 09:25:57 Aruna said : Report Abuse
தாய் இறந்தால் வரிசக வருபவர்கள் யார் யார்? தந்தை மகனுக்கு வாரிசாக வர முடியுமா.?
 
08-Jul-2019 06:32:59 மணிவாசகன் said : Report Abuse
எனது தாத்தா இறந்தற்கு இறப்பு சான்றிதழ் இல்லை அவர் இறந்து இருவது வருடம் ஆகிறது அதை எவ்வாறு பெறுவது எனது தந்தை சகோதரர்கள் மூன்று நபர்கள் அவர்களில் மூத்தவர் இறந்த்து விட்டார்.இப்போது நாங்கள் என்ன செய்வது
 
26-Feb-2019 03:48:35 C.MAHENDIRAN said : Report Abuse
வாாிசு சான்றிதல் வாங்கி விட்டோம் ஆனால் இப்பொழுது இறப்புச் சான்றிதல் தொலைந்துவிட்டது. எங்கு எப்படி வாங்குவது.
 
26-Jan-2019 15:47:41 Nandhu said : Report Abuse
வாரிசு பதிவு செய்து சான்றிதழ் வரப்பட்டு திருப்பி ரத்து செய்து விட்டேன் ஆனால் மறுபடி பதிவு செய்தேன் 35நாள் ஆகியும் வரவில்லை நான் என்ன செய்வது
 
19-Jun-2018 06:00:18 P. Kannan said : Report Abuse
3 எஅர்ஸ்
 
17-May-2018 08:56:19 மணி said : Report Abuse
நான் எனது தந்தை இறந்தபிறகு வாரிசு சான்றிதல் வாங்கச் சென்றேன். எனது அம்மாவும் இறந்து 18 வருடங்கள் ஆகின்றது. வட்டாச்சியர் அலுவலகத்தில், எனது அம்மாவின் இறப்பு சான்றிதழ் மற்றும் எனது தந்தையின் அப்பா, அம்மாவின் இறப்பு சான்றிதழும் கேட்கின்றனர். முன்னரே இறந்தவர்களின் ஆவணங்கள் தேவையா ?
 
07-Feb-2018 04:25:55 ARULRAJ K said : Report Abuse
10 varudathrku முந்தய vaarisu santrithal பெறுவது எப்படி ப்ளஸ் formula
 
10-Jan-2018 09:41:31 S.Pandiyan said : Report Abuse
Sir naan varisu certificate pathivu pani 28 days ithuvaraikkum entha thakavalum illai naan eppati therinthukolla mudiyum sir
 
08-Jan-2018 07:00:38 Sundarapandiyan. G said : Report Abuse
My grandma expired in 1983, how I will get vaarisu chanrithal. I have my grandma death certificate and vaarisu kalin id& address proofs, how many days- process taken.
 
02-Dec-2017 11:38:50 jj said : Report Abuse
தமிழ்நாடு அரசாங்கம் மதிகெட்ட அரசாங்கம்.. லஞ்சம் வாங்கும் பிச்சய் காரர்கள் ..
 
02-Jul-2017 16:45:44 ட. முனுசாமி said : Report Abuse
லீகல் ஹியர் செர்டிபிகாடே
 
15-Jun-2017 03:42:21 jasmine said : Report Abuse
That's sothai peranukku urimai unda
 
21-Apr-2017 05:53:08 சத்தியசீலன்.எ said : Report Abuse
சார் நான் 21.௦4.௨௦௧௭அன்று பதிவு செய்துவிட்டேன் என்னை எப்படி தொடர்பு கொள்வார்கள் என்னுடைய போன் நம்பர் அவர்களுக்கு தெரியாது
 
05-Apr-2017 08:27:46 துரை said : Report Abuse
Evvaru 30natkalil Tamil nattil varisu sandru kidaippathillai, Ella idankalilum lansam kodukka vendum. Web site undakkiyavarukku தெரியாத
 
13-Jan-2017 17:49:04 Anantha kumar said : Report Abuse
Very useful message thanks for valitamil
 
18-Oct-2016 05:38:36 ஸ்.nagarajan said : Report Abuse
IThe dept has taken more time to take and issue the certificate I think it is 1 month time it is very slow action
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.