பிறக்க போகும் குழந்தை ஆணாக இருக்க கூடாதா என ஏங்கும் பல குடும்பங்கள் இந்த உலகில் இருக்கிறது.பெண்குழந்தை பிறந்தால் அதற்கு நிறைய செலவு செய்யவேண்டுமே அதற்காக தான் ஆண்குழந்தையை அவர்கள் விரும்புகிறார்கள்.பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று மருத்துவமனைக்கு சட்டம் சொல்கிறது.காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, பிறக்கப் போகும் குழந்தை ஆணா ? பெண்ணா ? என கண்டுபிடிக்க சில யோசனைகளை கூறியுள்ளார், அவை பின்வருமாறு,
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்து காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.
கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.
பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
|