LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கண் பராமரிப்பு(Eye Care)

கண் பார்வை திறன் அதிகரிக்க உதவும் சித்தர்களின் பஞ்ச கல்பம் !!

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் பார்வை குறைபாடு காரணமாக கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொள்கின்றனர். பெரியவர்களோ கண் பார்வை தெளிவடைய கண்ணில் அறுவை சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர்.

கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது. மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் நமது ஆயுளும் நீட்டிக்கப்படும்.

கண் பிராணன் நின்று உலவும் இடம், மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது.

நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள். ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது. உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை, தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன. கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிகள் மூலம், தச நாடிகளிலும் வியாபித்து உடலெங்கும் சில வினாடிகளில் பரவி விஷம், வாதம், சன்னி, பல கர்ம வியாதிகள், தோல் வியாதிகள், மனோ வியாதிகள் இன்னும் பல வியாதிகள் முதலானவைகளைக் கூட கண்டித்து எறியும் தன்மை உள்ளது. இப்படிக் கண்களில் பிரயோகிக்கும் மருந்தை கலிக்கம் என்பார்கள்.

இப்படிக் கண்ணில் போடும் மருந்து கண்ணுக்கு பார்வை அளிப்பதுடன் மேலும் பற்பல வியாதிகளை குணமாக்கும் வல்லமையும் பெற்று விளங்குகின்றன.  

இப்போது தலையில் போடும் மருந்தால் கண்ணுக்கு வல்லமை அளிப்பதைப் பற்றி பார்ப்போம்.

பஞ்ச கல்பம் என்றழைக்கப்படும் இந்த மருந்து சித்தர்கள் கண்டுபிடித்த மருந்தாகும். இராமலிங்க வள்ளலாரும் இந்த மருந்தை மிகப் பெருமையாகக் கூறியுள்ளார். இது தலையில் உள்ள சஹஸ்ராரச் சக்கரத்திற்கு வலிமையளிப்பதுடன், நோய்கள் நம்மை அணுகாமல் காக்கும் வல்லமையுள்ளது.

பஞ்ச கல்பம் ஐந்து வகையான மூலப் பொருள்களைக் கலந்து தயாரிப்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

கீழ்க்கண்ட சரக்குகளை எடுத்துக் கொள்ளவும்.

1) வெள்ளை மிளகு (சுத்தி செய்தது) - 150கிராம்

2) கடுக்காய்த் தோல் (சுத்தி செய்தது) - 125கிராம்

3) வேப்பம் பருப்பு உலர்ந்தது - 100கிராம்

4) நெல்லி வற்றல் - 75கிராம்

5) கஸ்தூரி மஞ்சள் - 50கிராம்


மேற்கண்ட ஐந்து பொருட்களையும் நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பொடியை சிறிது பால் விட்டு அரைத்து 50 மிலி பசுவின் பாலில் கலந்து காய்ச்ச வேண்டும். பஞ்ச கல்பம் தேய்த்து குளித்து வந்தால் நோய்களிடம் இருந்து விடுபட்டு நாம் ஆரோக்கியத்துடன் வாழலாம்

by Swathi   on 23 May 2015  35 Comments
Tags: கண் பார்வை   Eyesight   Improve Eyesight   பஞ்ச கல்பம்   pancha kalpa        

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems
கண் பார்வை திறன் அதிகரிக்க உதவும் சித்தர்களின் பஞ்ச கல்பம் !! கண் பார்வை திறன் அதிகரிக்க உதவும் சித்தர்களின் பஞ்ச கல்பம் !!
கருத்துகள்
02-Mar-2019 19:52:06 Dhana said : Report Abuse
Sir yenaku _2 Power thuraiparvai how to cure..
 
26-Oct-2018 02:06:22 பாலகிருஷ்ணன் said : Report Abuse
எணக்கு 57 வயது ஆகிறது.எணக்கு கிட்ட மற்றும் தூரப்பார்வை உள்ளது. உங்கள் நேத்தர தைலம் எங்கு கிடைக்கும் தகவல் தரவும்
 
23-Mar-2018 08:21:40 பிரியா said : Report Abuse
ஐயா வணக்கம் எனது மகனுக்கு கிட்டப்பார்வை உள்ளது தொலைவில் உள்ள எதையும் அவரால் காணமுடியவில்லை எனக்கு உதவி செய்யுங்கள் நன்றி
 
02-Dec-2017 13:07:44 Roopan Raj said : Report Abuse
சூப்பர்
 
17-Nov-2017 11:27:43 Suresh said : Report Abuse
எனக்கு வலது கண் பார்வை மங்கலாக உள்ளது .
 
05-Nov-2017 10:39:10 Roopan Raj said : Report Abuse
நேத்ரா மருந்தைப் பற்றிய ஐயாவின் உரையை வலைதளத்தில் கேட்டேன்...கடவுளின் வரம் போல ஒரு அனுபவம்...ஏனெனில் நான் கண்ணாடி அணிந்துள்ளதால் பலரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகி கூனிக்குறுகி போய்விட்டேன்.இந்த மருந்தை எவ்வாறு பெறுவது என்கிற விபரம் தெரியவில்லை.கடைகளில் கிடைக்குமா? தயவு செய்து பதிலனுப்பவும்.சிறந்த வாய்ப்பை தவறவிட விருப்பம் இல்லை.. தொடர்புக்கு : ரூபன்ராஜ் /9488357791
 
15-Aug-2017 15:08:30 A.MANIKANDAN said : Report Abuse
என் அப்பாவுக்கு இரண்டு வருடங்களுக்கு முன் கண் அறுவை சிகிச்சை செய்தோம் இன்னும் பார்வை வர வில்லை... என்ன செய்யனும் சொல்லுங்க..
 
16-Jul-2017 14:47:45 Vijay said : Report Abuse
எங்க அப்பாவுக்கு கண் பார்வை 2 வருடமாக தெரியவில்லை ஹாஸ்பிடல் பொய் பலன் இல்லை ,நல்ல இருந்தாரு ,இப்போ என்ன செய்யறது தெரில சார்
 
13-Jul-2017 12:58:53 செல்வா said : Report Abuse
ஹாய் சார், நன் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒர்க் பண்றேன் எனது கண் பார்வை -2 ல இருக்கு இதை சரி செய்ய என்ன வேண்டும் .
 
03-Jun-2017 05:01:49 கோவிந்தா rajan said : Report Abuse
கண் பார்வை குறிப்படி
 
21-May-2017 07:29:57 balachandar said : Report Abuse
நேத்ரா மருந்து எங்க கிடைக்கும் ? நீங்கள் தருவிண்கல.. போன் நம்பர் 9791628919
 
02-May-2017 19:10:35 DHINAKARAN said : Report Abuse
எனது அக்கா பையனுக்கு மாலை கண் நோய இருப்பதால் அதை சரிசெய்ய moolaigi மருந்து இருக்கிறதா அந்த மருந்து எங்கே கிடைக்கும் . எனக்கும் கிட்டப்பார்வை இருப்பதால் நேத்ரா மூலிகை மருந்து எங்கே கிடைக்கும்.
 
28-Apr-2017 23:36:43 DHINAKARAN said : Report Abuse
எனது அக்கா பையனுக்கு மாலை கண் நோய இருப்பதால் அதை eppadi சரிப்ட்னறது அதற்கு மூலிகை மருந்து இருக்கிறதா ஆந்த மருந்து எங்கே கிடிக்ககும். எனக்ககும் கிட்ட பார்வை நோய இருப்பதில் நேத்ரா எந்த KATIKALIL KITIKKGUM
 
06-Jan-2017 21:18:25 MANIKANDAN.a said : Report Abuse
கண் பார்வை அதிகமாக்க என்ன வகையாண உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
 
28-Dec-2016 04:32:51 anand said : Report Abuse
லெப்ட் கண் பவர் -இருக்கு நான் கண்ணாடி போடாம இருக்கேன் அதுக்கு என்ன பண்ண பவர் அதிகரிக்காது
 
08-Nov-2016 08:52:37 raj said : Thank you
டியர் சார் என்னுடைய கன் சற்று உள்ளே சென்ரதுபோல் தெரிகிறது . itharuku ஏதேனும் மருந்து உள்ளதா
 
08-Jul-2016 11:19:14 ப.செக்கடிகருப்பு said : Report Abuse
ஐயா வணக்கம் நான் மிகவும் தடிமன்னான கண்ணாடி போட்டுருக்கேன் காண்ணாடியே எடுத்துவிட்டால் எனக்கு மிகவும் குறைவான பார்வை தெரிகிறது. கண்ணாடி இல்லாமல் என்னால் தெளிவான பார்வையே பார்க்க முடியுமா. அதெற்கு என்ன வலி அய்யா. ப்ளீஸ்.
 
03-Jul-2016 04:21:28 லக்ஷ்மி குமார் said : Report Abuse
என்னுடைய கண் பார்வை கண்ணாடி இல்லாமல் மங்கலாக தெரிகிறது கண்ணாடி போடாமல் பார்வையை தெளிவாக தெரியவைக்கலாமா என்று சொல்லுங்கள் அப்படி தெரிய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அய்யா
 
28-Jun-2016 04:25:36 Vijayakumar said : Report Abuse
எனது இடது கண் பார்வை 2 ஆக தெரிகிறது. எழுத்துகள் பார்க்கும்போது. இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.
 
13-Jun-2016 22:22:28 Venkateswaran said : Report Abuse
வணக்கம் ஐயா எனக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது அதை சரி செய்ய வேண்டும் வழி சொல்ங்க
 
01-Jun-2016 04:56:18 John Felix said : Report Abuse
கண்பார்வை மங்கலாக உள்ளது. வலது கண்பார்வை ரொம்ப மங்கலாக உள்ளது. கண் இஇருந்தும் குருடனாக உளஉள்ளேன் please tell me any solutions.
 
09-Apr-2016 10:46:24 s.vijay vivekaanand said : Report Abuse
While seeing the objects .it seems to be some insects are flying and my eyes are paining .I could not able to read even books continuously and TV also ;I have this problem for the last 4years I checked my eyes also
 
02-Apr-2016 00:04:12 Priya said : Report Abuse
Sir photo adukum podhu eye kusudhu sir 3 years sir flash vandha eye kusudhu sir
 
02-Feb-2016 23:05:01 pramila said : Report Abuse
கண் பிரச்சனை , கண் வலி , தலைவலி , எப்படி தீர்ப்பது
 
18-Sep-2015 07:59:18 த.SASIKUMAR said : Report Abuse
இது போன்ற முறைகளை பதிவு செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
 
07-Sep-2015 23:44:24 ganeshbala said : Report Abuse
சார் எனக்கு காது நரம்புகள் ரொம்ப வீக் இருக்கு அடிகடி சுடக்கு சவுண்ட் கேக்குது என்ன பண்ணனும் சார் பிளஸ் ஹெல்ப் me
 
06-Sep-2015 04:02:45 m.surenthar said : Report Abuse
நான் துரபர்வை கண்ணாடி அணிதேன்..1 மாதம் இப்பம் கண்ணாடி போடல.இதனால் பிரச்சன வருமா சார் ..
 
04-Sep-2015 04:46:20 சௌகத் அலி said : Report Abuse
நான் கண்ணாடி போட்டுள்ளேன்.... கண் பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.... மருத்துவா தகவல் தரவும் .... நன்றி
 
23-Aug-2015 13:50:17 vijay said : Report Abuse
இந்த தலத்தில் உள்ள அணைத்து குறிப்புகளும் பயன் உள்ளதாக இருக்கிறது
 
17-Jul-2015 02:51:35 வளர்மதி said : Report Abuse
ஹொவ் டு இன்ச்ரியசே எயெ சைட்
 
11-Jul-2015 23:08:22 சுரேஷ் babu said : Report Abuse
கியான் miyan
 
09-Jul-2015 03:44:45 DIVYA said : Report Abuse
கண்கள் மங்கலாக தெரிகிறது இடது கண்கள் அடிகடி வழிகிறது
 
09-Jul-2015 03:43:57 DIVYA said : Report Abuse
கண்கள் மங்கலாக தெரிகிறது இடது கண்கள் அடிகடி வழிகிறது
 
22-Jun-2015 11:49:49 மீனாக்ஷி சுந்தரம் said : Report Abuse
அய்யா, eதில் உள்ள கருத்துக்கள் நம் சந்ததிeனருக்கு அவசியம் வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.
 
10-Jun-2015 23:55:50 வ .காமராஜ் said : Report Abuse
நன்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.