அமெரிக்கா மற்ற நாட்டு ரகசியங்களை கம்ப்யூட்டர் மூலமாக உளவு பார்ப்பதாக, சமீபத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த குற்றத்தை மெய்பிக்கும் விதமாக சில ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டனர். இதனை அடுத்து ரஷ்ய அரசு, முக்கிய ஆவணங்களை பாதுகாக்க பழைய காலத்து நடைமுறைப்படி டைப்ரைட்டர் மூலம் தட்டச்சு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் மாளிகையில் விரைவில் 20 டைப்ரைட்டர்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு சார்பு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
|