ஐ பட ரிலீசுக்கு ஏற்பட்ட பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டதை அடுத்து ஜனவரி 14ம் தேதி ஐ படம் ரிலீசாவது உறுதியாகியுள்ளது.
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரம்-எமி ஜாக்சன் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பிரமாண்டமாக உருவாகி வந்த படம் ஐ.
இந்த படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக இருந்தது. இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென நேற்று முன்தினம் இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட், 3 வார காலத்திற்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதித்து இருந்தது. மேலும் இதுதொடர்பாக ஜன. 30ம் தேதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தரும்படியும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் சுமூகமாக பேசி தீர்த்துள்ளனர். இதனையடுத்து படம் வௌியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், திட்டமிட்டபடி ஐ படம் ஜன.,14ம் தேதி ரிலீஸாகும் என ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
|