LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

தமிழகத்தில் தான் நானும் பிறந்தேன்- கூகுள் சுந்தர் பிச்சையை விசாரணை செய்த பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் பெருமிதம்!

தமிழகத்தில் தான் நானும் பிறந்தேன் என கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை விசாரணை செய்த அமெரிக்க பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் பெருமிதம் அடைந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுவது, சீனாவில் புதிய சர்ச் இஞ்சின் அறிமுகம் செய்ய இருப்பது மற்றும் கூகுள் பயனாளர்களின் ரகசிய விவரங்கள் பாதுகாப்பு குறித்து நிறைய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு முன்வைத்தது.

அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவின்   சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கேப்பிட்டல் ஹில்லிற்கு, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சென்றார்.நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர்  கேட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை பதில் அளித்தார்.

நாடாளுமன்ற விசாரணைக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் 7 -வது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால். 

பல காட்டமான கேள்விகளுக்கு இடையே சுந்தர் பிச்சைக்கு முகம் மலர வாழ்த்து ஒன்றை,  பிரமிளா ஜெயபால் தெரிவித்தார்.

இது குறித்து சுந்தர் பிச்சையிடம் அவர் பேசும்போது, ''என்னைக் கொஞ்சம் தனிப்பட்ட விஷயத்தைப் பேச அனுமதியுங்கள். சுந்தர் நானும் இந்தியாவில் நீங்கள் பிறந்த தமிழகத்தில்தான் பிறந்தேன்.இன்று உலகின் மிக முக்கியமான இருவேறு பொறுப்புகளில் நாம் இருவரும் பதவி வகிக்கின்றோம். 

வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் மக்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் வெளிநாட்டினர் இந்நாட்டிற்கு அளிக்கும் பங்களிப்பு மகத்தானது.

இவ்வாறு பிரமிளா ஜெயபால் கூறினார்.

53 வயதாகும் பிரமிளா ஜெயபால்  சென்னையில் பிறந்தவர். அமெரிக்காவில் படிப்பதற்காக மாணவராக அங்கு சென்றவர்.  சுந்தர் பிச்சையும் சென்னையில் பிறந்து ஐ.ஐ.டி காரக்பூரில் படித்துவிட்டு பின்பு 2004 ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இனப்படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், மற்றும் வெறுப்பினை வெளிப்படுத்தும் விதமான பேச்சுகள் குறித்து தன்னுடைய கேள்விகளையும் சந்தேகங்களையும் விசாரித்தார் பிரமிளா ஜெயபால்.
வேலை செய்யும் இடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பினார் பிரமிளா ஜெயபால். அனைத்து கேள்விகளுக்கும் அழகாகவும், பொறுப்பாகவும் சுந்தர் பிச்சை பதில் கூறினார்.

by Mani Bharathi   on 14 Dec 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.