LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பற்றாக்குறை: அதிகளவில் தேர்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை

     அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
     இதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.
     நிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய 'சிவில் சர்வீஸ் -2010' மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
by Swathi   on 22 Sep 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.