|
||||||||
இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றி |
||||||||
வகுப்பில் பாலுச்சாமியின் தொல்லை தாங்க முடியவில்லை . ஆசிரியருக்குப் பல முறை கண்டித்துப் பார்த்தும் திருந்துகிற வழியே தெரியவில்லை . பக்கத்துப் பையனை அடிப்பான் , கெட்ட வார்த்தை பேசுவான் . பீடி புகைப்பான் , ரோட்டில் ஓடும் பஸ் மீது கல் வீசிட ஆரம்பிப்பான் . அரசியல் , கட்சி , ஊர்வலம் நடத்தினால் அதில் சேர்ந்து ஓடுவான் . ஆசிரியர் அவனை இழுத்துப் போய் , தலைமையாசிரியரிடம்அவன் செய்த தவறுகளை எடுத்துச்சொல்லி டி . சி . கொடுக்கச்சொன்னார் . தலைமையாசிரியர் , “ சார் நம்ம பாலுச்சாமி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது , அவன்தான் எதிர்கால அமைச்சர்னு தோணுது . மினிஸ்டர் படிச்ச ஸ்கூல்னு பேர் வரலாம் . அவன் படிச்சா படிச்சிட்டுப்போகட்டும் ” என்றார் . இப்படியே பழகி விட்ட நமக்குத் தூய்மையான வாழ்வுடன் ஒரு தலைவர் நம் சமகாலத்தில் வாழ்ந்தார் என்று கேள்விப்படுவதே அதிசயம் தான் . மார்ஷல் நேசமணி மரணம் அடைந்ததால் 1969 ஆம் ஆண்டு ஜனவரியில் நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது . நெடுமாறன் , சிரோன்மணி இரு இளைஞர்களும் தொகுதி நிலவரத்தைக் கூறினர் . நாகர்கோவில் தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கினார் . 1969 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . அப்பச்சி , அப்பச்சி என்று குமரி மக்கள் அன்போடு பெருந்தலைவரை அழைத்தனர் . காமராசர் பேட்ஜை உடம்பிலே குத்திக் கொண்ட காட்சி நெகிழ வைத்தது . ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெருந்தலைவர் வெற்றி பெற்றார் . நாகர்கோவிலுக்கு நாயகனாகி குமரி மக்களின் அப்பச்சி ஆனார் பெருந்தலைவர் . அன்னை சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாகத் தலைவருக்குத் தகவல் வந்தது . தாயார் முகத்தில் எந்தவிதமான பரபரப்போ , பதட்டமோ காணப்படவில்லை . விருதுநகரில் வீட்டிற்குள் சென்ற தலைவர் மயங்கிய நிலையில் இருந்த அன்னை அருகில் அமர்ந்தார் . கண் விழித்துப் பார்த்த அன்னையின் விழிகளில் நீர் வழிந்தது . எந்தவிதச் சலனமும் இன்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராசர் விசாரித்தார் . “ ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ ” என்று அன்னை சிவகாமி கூறினார் . தலைவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு “ அப்போ நான் வரட்டுமா ” என்று கை கூப்பினார் . “ மகராசனாய்ப்போய் வா ” என்று தாய் விடை கொடுத்தார் . வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது ? என்று உடன் இருந்தவர்கள்கேட்டார்கள் . “ ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும் ” என்றார் தலைவர் . அனைவரும் திகைத்தனர் . மரணப் படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தலைவர் உடனே நாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|