LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

இடைத் தேர்தலில் இணையற்ற வெற்றி

வகுப்பில் பாலுச்சாமியின் தொல்லை தாங்க முடியவில்லை . ஆசிரியருக்குப் பல முறை கண்டித்துப் பார்த்தும் திருந்துகிற வழியே தெரியவில்லை .

பக்கத்துப் பையனை அடிப்பான் , கெட்ட வார்த்தை பேசுவான் . பீடி புகைப்பான் , ரோட்டில் ஓடும் பஸ் மீது கல் வீசிட ஆரம்பிப்பான் . அரசியல் , கட்சி , ஊர்வலம் நடத்தினால் அதில் சேர்ந்து ஓடுவான் .

ஆசிரியர் அவனை இழுத்துப் போய் , தலைமையாசிரியரிடம்அவன் செய்த தவறுகளை எடுத்துச்சொல்லி டி . சி . கொடுக்கச்சொன்னார் . தலைமையாசிரியர் , “ சார் நம்ம பாலுச்சாமி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது , அவன்தான் எதிர்கால அமைச்சர்னு தோணுது . மினிஸ்டர் படிச்ச ஸ்கூல்னு பேர் வரலாம் . அவன் படிச்சா படிச்சிட்டுப்போகட்டும் ” என்றார் .

இப்படியே பழகி விட்ட நமக்குத் தூய்மையான வாழ்வுடன் ஒரு தலைவர் நம் சமகாலத்தில் வாழ்ந்தார் என்று கேள்விப்படுவதே அதிசயம் தான் .

மார்ஷல் நேசமணி மரணம் அடைந்ததால் 1969 ஆம் ஆண்டு ஜனவரியில் நாகர்கோவில் இடைத்தேர்தல் நடந்தது . நெடுமாறன் , சிரோன்மணி இரு இளைஞர்களும் தொகுதி நிலவரத்தைக் கூறினர் . நாகர்கோவில் தொகுதியில் தலைவர் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கினார் .

1969 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது . அப்பச்சி , அப்பச்சி என்று குமரி மக்கள் அன்போடு பெருந்தலைவரை அழைத்தனர் . காமராசர் பேட்ஜை உடம்பிலே குத்திக் கொண்ட காட்சி நெகிழ வைத்தது . ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் பெருந்தலைவர் வெற்றி பெற்றார் . நாகர்கோவிலுக்கு நாயகனாகி குமரி மக்களின் அப்பச்சி ஆனார் பெருந்தலைவர் .

அன்னை சிவகாமி அம்மையார் சுகவீனமாய் இருப்பதாகத் தலைவருக்குத் தகவல் வந்தது . தாயார் முகத்தில் எந்தவிதமான பரபரப்போ , பதட்டமோ காணப்படவில்லை .

விருதுநகரில் வீட்டிற்குள் சென்ற தலைவர் மயங்கிய நிலையில் இருந்த அன்னை அருகில் அமர்ந்தார் . கண் விழித்துப் பார்த்த அன்னையின் விழிகளில் நீர் வழிந்தது . எந்தவிதச் சலனமும் இன்றி தாயின் உணவு மற்றும் மருந்து பற்றி காமராசர் விசாரித்தார் .

“ ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ ” என்று அன்னை சிவகாமி கூறினார் . தலைவரும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு “ அப்போ நான் வரட்டுமா ” என்று கை கூப்பினார் . “ மகராசனாய்ப்போய் வா ” என்று தாய் விடை கொடுத்தார் . வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு நாளானது ? என்று உடன் இருந்தவர்கள்கேட்டார்கள் . “ ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும் ” என்றார் தலைவர் . அனைவரும் திகைத்தனர் . மரணப் படுக்கையில் இருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய தலைவர் உடனே நாட்டைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் .

by Swathi   on 03 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.