|
||||||||
இட்லி சாம்பார்(idli sambar) |
||||||||
தேவையானவை: துவரம்பருப்பு - 1/2 கப் பயத்தம்பருப்பு - 1/4 கப் புளி - நெல்லிக்காயளவு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் சாம்பார் வெங்காயம் - 15 தக்காளி - 1 பச்சைமிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது கொத்துமல்லித்தழை - சிறிது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் செய்முறை: 1.துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து, குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும். 2.புளியை ஊறவைத்து, கரைத்து 1/2 கப் வரும் அளவிற்கு, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். 3.ஒருகடாயில் எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூள், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். 4.வெங்காயம் வாசனை வரும் வரை வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து சிறிது வதக்கவும். 5.பிறகு அதில் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு அத்துடன் புளித்தண்ணீரைச் சேர்த்து கலந்து, மூடி கொதிக்க விடவும். 6.ஓரிரு நிமிடங்கள் நன்றாகக்கொதித்தவுடன், வெந்தப்பருப்பைச் சேர்த்து கிளறி விடவும். கொத்துமல்லித் தழையைத்தூவவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|