|
||||||||
புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது : ராஜஸ்தான் மாநில அரசு !! |
||||||||
புகைபிடிப்பவர்கள், புகையிலையை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு, சமீபத்தில் அரசு ஊழியர்கள் தேர்வு குறித்து ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட மாட்டது. மேலும், அரசு வேலையில் சேர்பவர்கள், புகைபிடிக்க மாட்டேன், புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என, உறுதிமொழி அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் முறையாக :
புகையிலை தொடர்பான இந்த முடிவு, உலகிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட உள்ளதாக அம்மாநில புகையிலை கட்டுப்பாட்டு குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் திருட்டுத்தனமாக புகையிலை பொருட்களை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு தண்டனை வழங்க அரசுடன் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார். |
||||||||
by Swathi on 08 Nov 2013 0 Comments | ||||||||
Tags: Quit Tobacco Government Job Rajasthan Govt ராஜஸ்தான் புகையிலை சிகரட் அரசு வேலை | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|