LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

இல்வாழ்க்கை

தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.
383.
நன்னுதற் பாவையுன்வல்லவ நீர்மையை நானென்சொல்வேன்
மின்னுதற் கண்ணர் கலைசைத் தியாகர் வியன்கிரிமேல்
என்னுழைப் பால்வந்த தென்னையந் நாண்முத லின்றளவும்
உன்னுழைப் பாலல்ல வோபெற் றுளோமிந்த வூதியமே. 1

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.
384.
மூவா மருந்தென்ன முன்சொன்ன வஞ்சின முற்றுவித்தே
ஓவா வலருட னென்கட் புனலு மொழித்தனையால்
காவார் கலைசைத் தியாகேச ருஞ்சிவ காமியும்போல்
நீவாழி யெம்பெரு மானிவ ளோடென்று நீணிலத்தே. 2

வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை பாங்கி தலைவியை
வினாதல்.
385.
அந்தமி ழின்சுவை போன்மொழி யாய்மன்ற லாற்றுபரி
யந்தமெவ் வாறெவ்வ மாற்றி யிருந்தனை யன்றுவந்த
அந்தகற் காய்ந்த கலைசைத் தியாகருக் கன்பிலர்தாங்
கந்தமில் பாவப் பொறையின்மின் னார்சொல் லலர்சுமந்தே. 3

தலைவி வருந்தாதிருந்ததற்குக் காரணம் கூறல்.
386.
அற்புதக் கூத்தர் கலைசைத் தியாகர்மெய் யஞ்செழுத்தாம்
சொற்புனை யாலன்பர் துன்பக் கடலைத் தொலைப்பதுபோல்
நற்பிணை யற்குழ லாய்துயர் வெள்ளநம் மன்பர்தந்த
கற்புணை யாலுநின் ‍சொற்புணை யாலுங் கடந்தனனே. 4

பாங்கி தலைவனை வரையுநாளளவும் நிலைபெற
ஆற்றியநிலைமை வினாதல்.
387.
படைகொண்ட கையர் கலைசைத் தியாகரைப் பற்றினர்போற்
றொடைகொண்டகோதையை நீயின்றைவாயினுந்துய்த்திடலாற்
புடைகொண்டு பண்டு பிரியுந் தொறுமப் பொழுதிடையில்
விடைகொண்டதோநின்றதோ விவண்மேல்வைத்தவேட்கையதே. 5

பாங்கி மணமனைச்சென்ற செவிலிக்கு இருவரன்பும் உணர்த்தல்.
388.
ஏக னநேகன் சிதம்பர வீசன் கலைசையினம்
மோகன வல்லி முலைமுகை காட்டி முகமலர்ந்து
பாகம் பதிந்திதழ்த் தேன்றர லாலன்னை பார்த்திபன்றான்
ஆகங் குளிரவண் டாயுண் டுவக்கு மனுதினமே. 6

பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல்.
389.
காளிதன் கேள்வர் கலைசைத் தியாகர் கருணைமலர்த்
தாளித மாத்தொழு வார்க்கன மூட்டித்தற் காத்துநின்வேய்த்
தோளிதற் கொண்டவற் பேணி யவரைச் சுவைதருபாற்
பாளித நாளு மிசைவித்துப் பூரிக்கும் பான்மையளே. 7

மணமனைச்சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பியல்
நற்றாய்க்கு உணர்த்தல்.
390.
சிவமுத லாந்தென் கலைசைத் தியாகர் சிலம்பினின்மான்
அவமுந் திரியு முறாமனை வாழ்க்கைக்கற் பாற்கிரக
நவமுநன் றாகவென் றானன்மை யேதரு நந்தியபா
தவமுந் தழைகவென் றாற்றளிர் தோன்றித் தழைத்திடுமே. 8

செவிலி நற்றாய்க்கு நன்மனைவாழ்க்கைத் தன்மை யுரைத்தல்.
391.
அல்லாருங் கண்டர் கலைசைத் தியாக ரசலத்திலுன்
இல்லாரும் வாழ்வினி னல்லாண் மனைச்செல்வ மெண்மடங்கால்
நல்லாய் நினக்கன்ப னீயானொப் பாதுமந் நாதனம்மான்
எல்லாளில் வேலை வருவார்க் கடுவ திடுவதுமே. 9

செவிலி நற்றாய்க்கு இருவர்காதலையும் அறிவித்தல்.
392.
பின்னுஞ் சடையர் கலைசைத் தியாகர் பிறங்கலன்னாய்
பொன்னும் பணியு மிருள்வெளி சொற்பொருள் போற்பிறர்கள்
உன்னு மபேத முதன்மூன்று மன்றிநம் முத்தமியும்
மன்னும் பிரிவின்றி யேயொன்ற தாயுற்று வாழ்குவரே. 10

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.