மதுரையில் முதன் முறையாக ஏல முறையில் தேங்காய்கள் விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி
வாடிப்பட்டி வேளாண் விற்பனைக்குழு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் முதன்முறையாக நடந்தது. இதில் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாகத் தேங்காய்களை விற்பனை செய்தனர். மாவட்ட வேளாண்மைத் துறை இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில் ஏலம் நடந்தது. ஒரு தேங்காய் ரூ. 12 என்ற விலைக்கு மொத்தம் ரூ.1லட்சத்து 728-க்கு தேங்காய்கள் ஏலம் போயின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
|