மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் மூத்த தலைவர் சோனியா மகாத்மா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
|