LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை !

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் நல்ல விதமாக தான் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல பிள்ளைகளாகவும், தீய குணம் உடைய பிள்ளைகளாகவும் மாறுவது, அவர்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை மற்றும் பெற்றோரின் வளர்ப்பு. பெற்றோர்கள் நடந்து கொள்ளும் வித்தத்தில் தான் குழந்தைகளின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுகிறது. ஆகையால் குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

 

-> பெற்றோர்கள் தீய சொற்களை பேசுவதை தவிர்க்கவும். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

-> கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

 

-> குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

 

-> குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

 

-> உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

 

-> குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

 

-> சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

 

-> சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

 

-> குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

 

-> குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் எண்ணெய் வாங்கிட்டு வந்தால், உனக்கு ஐஸ்கிரீம் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

 

-> படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

by Swathi   on 02 Apr 2013  3 Comments
Tags: பெற்றோர்   குழந்தைகள் முன்னிலையில்   Parents   Children           
 தொடர்புடையவை-Related Articles
பெற்றோர்களின் கவனத்திற்கு - குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் கவனத்திற்கு - குழந்தை வளர்ப்பு
+2 பெற்றோரே ! ப்ளீஸ்……..பேரா. டாக்டர் அப்பாத்துரை +2 பெற்றோரே ! ப்ளீஸ்……..பேரா. டாக்டர் அப்பாத்துரை
பிள்ளைகளை தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரா நீங்கள் !! பிள்ளைகளை தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரா நீங்கள் !!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளி குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் !! ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளி குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் !!
குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை ! குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை !
கருத்துகள்
29-Jul-2016 02:05:39 AIGINES said : Report Abuse
NO COMMENT
 
29-Mar-2014 10:54:59 பாஸ்கரன்.ச said : Report Abuse
the above statements are very useful to parents with kids
 
19-Nov-2013 06:48:20 சிவம்குரு said : Report Abuse
உங்கள் கருத்துகளை நான் பின்பற்ற மிகவும் பயன் உள்ளவை நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.