LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பதினெண் கீழ்க்கணக்கு

ஐந்திணை ஐம்பது

 

இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். 
நூல்
பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.
1. முல்லை
இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும். 
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். 1
அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி
மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !
கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்
பீர்நீர்மை கொண்டன தோள். 2
மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன
கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை
முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று
நமர்சென்ற நாட்டுள்இக் கார். 3
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்
வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி
நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். 4
கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்
கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி
வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்
துளிகலந்து வீழ்தருங் கண். 5
முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி
செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)
யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை
ஈரும் இருள்மாலை வந்து. 6
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை
ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்
சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)
எறிவது போலும் எனக்கு. 7
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா
கானம் கடந்துசென் றார். 8
வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)
உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்
பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன
வம்ப மறையுறக் கேட்டு. 9
நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக
தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற
கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம். 10
2. குறிஞ்சி
இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்
ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 
பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்
நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்
போயின சின்னாள் புனத்து மறையினால்
ஏயினார் இன்றி இனிது. 11
மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி
பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்
பாக்கம் இதுஎம் இடம். 12
கானக நாடன் கலவான்என் தோளென்று
மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்
கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பும் அகன்றுநில் லா. 13
புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்
தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவ லுற்றதொன் றுண்டு. 14
வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து
மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்
பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்
சேந்தனவாம் சேயரிக்கண் தாம். 15
கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு
மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை
அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண். 16
மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !
எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்
திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்
உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. 17
எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்
மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி
மாமலை நாட! மடமொழி தன்கேண்மை
நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18
நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக
கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்
இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்
என்னாவாள் என்னும்என் நெஞ்சு. 19
வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)
அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று
மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ
வெறியோ(டு) அலம்வரும் யாய். 20
3. மருதம்
இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும் 
கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி
நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்
வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்
தேற எமக்குரைப்பாய் நீ. 21
போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்
அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்
நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. 22
யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்
பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண
அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று. 23
கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை
நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்
சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்
காரத்தின் வெய்யஎம் தோள். 24
அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்
விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்
குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்
மழலைவாய் கட்டுரை யால். 25
பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற
செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்
கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்
எய்தி இடருற்ற வாறு. 26
தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ
நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்
வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய
வண்ணம் உடையேம்மற்(று) யாம். 27
ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு
வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)
ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்
நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. 28
ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்
புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்
எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்
தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். 29
குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்
வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !
ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி
கூடல் இனிதாம் எனக்கு. 30
4. பாலை
இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்)
ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் 
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்தழியும் நெஞ்சு. 31
விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்
அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு
கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)
உச்சி ஒழுக்கஞ் சுரம். 32
பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு. 33
கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி
வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்
வாள்தடங்கண் மாதரை நீத்து. 34
கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த
தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்
விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்
பொருள்புரிந்தார் போய சுரம். 35
கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்
பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்
வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்
தொடியோடி வீழத் துறந்து. 36
தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை. 37
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 38
மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப்
புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து
விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மில் பிரிந்த இடத்து. 39
இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்
குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலே சேக்கும் இடம். 40
5. நெய்தல்
இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும். 
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)
ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த
சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ
பூந்தலை அன்றில் புலம்பு. 41
கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்
கடந்த வழியைஎம் கண்ணாரக் காண
நடந்து சிதையாதி நீ. 42
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை
வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்
தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம். 43
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்
கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்
வண்டல் சிதைத்ததென் றேன். 44
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்
சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை
மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ
பூந்தண் பொழிலுள் குருகு. 45
ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்
பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்
கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி
தோள்நலம் தோற்பித்தல் நீ. 46
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்
உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்
அணங்காகும் ஆற்ற எமக்கு. 47
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த
நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியா தார். 48
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ
இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்
தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்
செய்தான் தெளியாக் குறி. 49
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட
மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்
புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். 50
ஐந்திணை ஐம்பது முற்றிற்று.

இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். 

நூல்

பாயிரம்

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரியவண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்தஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்செந்தமிழ் சேரா தவர்.

1. முல்லை
இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும். 
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்துசெல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோமயங்கி வலனேருங் கார். 1
அணிநிற மஞ்ஞை அகவ இரங்கிமணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்பீர்நீர்மை கொண்டன தோள். 2
மின்னும் முழக்கும் இடியும்மற் றின்னகொலைப்படை சாலப் பரப்பிய முல்லைமுகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்றுநமர்சென்ற நாட்டுள்இக் கார். 3
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறிநல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். 4
கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடிவளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்துளிகலந்து வீழ்தருங் கண். 5
முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பிசெல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமைஈரும் இருள்மாலை வந்து. 6
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலைஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)எறிவது போலும் எனக்கு. 7
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளிபொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாயவானம் பொழியவும் வாரார்கொல் இன்னாகானம் கடந்துசென் றார். 8
வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றனவம்ப மறையுறக் கேட்டு. 9
நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீகதேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்றகற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றிநிற்பாள் நிலையுணர்கம் யாம். 10

2. குறிஞ்சி
இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் 
பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்போயின சின்னாள் புனத்து மறையினால்ஏயினார் இன்றி இனிது. 11
மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவிபூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்பாக்கம் இதுஎம் இடம். 12
கானக நாடன் கலவான்என் தோளென்றுமானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்புலம்பும் அகன்றுநில் லா. 13
புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்துமாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்தாம்வினவ லுற்றதொன் றுண்டு. 14
வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்துமாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்சேந்தனவாம் சேயரிக்கண் தாம். 15
கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டுமடிசெவி வேழம் இரீஇ - அடியோசைஅஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்துஞ்சா சுடர்த்தொடி கண். 16
மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. 17
எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவிமாமலை நாட! மடமொழி தன்கேண்மைநீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18
நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாககடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்என்னாவாள் என்னும்என் நெஞ்சு. 19
வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்றுமறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇவெறியோ(டு) அலம்வரும் யாய். 20

3. மருதம்
இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும் 
கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரிநுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்தேற எமக்குரைப்பாய் நீ. 21
போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. 22
யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாணஅறிவ(து) அறியும் அறிவினார் கேண்மைநெறியே உரையாதோ மற்று. 23
கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளைநீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்காரத்தின் வெய்யஎம் தோள். 24
அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்மழலைவாய் கட்டுரை யால். 25
பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்றசெய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்எய்தி இடருற்ற வாறு. 26
தணவயல் ஊரன் புலக்கும் தகையமோநுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாயவண்ணம் உடையேம்மற்(று) யாம். 27
ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்குவல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. 28
ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். 29
குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனிகூடல் இனிதாம் எனக்கு. 30

4. பாலை
இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி (நீர்வற்றிய இடம்)ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும் 
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்துன்பம் கலந்தழியும் நெஞ்சு. 31
விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறுகற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)உச்சி ஒழுக்கஞ் சுரம். 32
பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்காய்ந்து கதிர்தெறூஉங் காடு. 33
கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்திவேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்வாள்தடங்கண் மாதரை நீத்து. 34
கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்ததடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்பொருள்புரிந்தார் போய சுரம். 35
கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்தொடியோடி வீழத் துறந்து. 36
தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாதுகல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்வல்லவோ மாதர் நடை. 37
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்உள்ளம் படர்ந்த நெறி. 38
மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப்புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்துவிம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோநம்மில் பிரிந்த இடத்து. 39
இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையாநன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்என்கொலே சேக்கும் இடம். 40

5. நெய்தல்
இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும். 
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்தசேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோபூந்தலை அன்றில் புலம்பு. 41
கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்கடந்த வழியைஎம் கண்ணாரக் காணநடந்து சிதையாதி நீ. 42
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னைவரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்ஆழியால் காணாமோ யாம். 43
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கிஉண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்வண்டல் சிதைத்ததென் றேன். 44
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமைமாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோபூந்தண் பொழிலுள் குருகு. 45
ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழிதோள்நலம் தோற்பித்தல் நீ. 46
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசிஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்அணங்காகும் ஆற்ற எமக்கு. 47
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்தநித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்பமிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்ஒற்கம் கடைப்பிடியா தார். 48
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூஇடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்செய்தான் தெளியாக் குறி. 49
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்டமணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். 50

ஐந்திணை ஐம்பது முற்றிற்று.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.