LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அமெரிக்கா நிறுவனத்துடன் அணு உலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் - சிவசங்கர் மேனன் திட்டவட்டம் !!

இந்தியாவில் அணு உலை அமைப்பதற்காக, அமெரிக்க நிறுவனத்துடன், ஒப்பந்தம் மேற்கொள்ள போவதாகவும், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால், இந்தியாவில் ஏற்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்கள், இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இருக்கும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியிருப்பதாவது, 


இந்தியாவில் அணு உலை அமைக்க, அமெரிக்காவின், "வெஸ்டிங்ஹவுஸ்' நிறுவனத்துடன், ஒப்பந்தம் மேற்கொள்ள போவது உண்மை தான். குஜராத்தில் அமைய உள்ள அணுமின் திட்டத்திற்கு, அந்த நிறுவனம், அணு உலையை வழங்க உள்ளது. இதற்காக நம் நாட்டின் நாடாளமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட, பேரிடர் இழப்பீடு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் போவதில்லை. அமெரிக்கா மட்டுமல்ல; எந்தவொரு நாடும், இந்தியாவில் அணு உலைகளை நிர்மானித்தால், அந்த நிறுவனங்களை இந்தியச் சட்டங்கள் தான் கட்டுப்படுத்தும். ஆனால், நேற்று முன்தினம் இதுகுறித்து, நடு முழுவதும், தேவையற்ற விவாதங்களும், ஊர்ஜிதமாகாத செய்திகளும் பரவியது, வியப்பை அளிக்கிறது. அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு நாம் பணிந்து விட்டதாக சிலர் கூறினர்; அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நம் நாட்டின் சிவில் அணுசக்தி நிறுவனங்களை நிர்வகிக்கும், தேசிய மின் கழகம் மற்றும் அணுசக்தி கழகமும் தான், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளன. அணு உலைகள் அமைக்கப்பட்ட பிறகும், இவை தான் அவற்றை நிர்வகிக்கும். எனவே, எதற்காகவும் பயப்பட தேவையில்லை என சிவசங்கர் மேனன் தெரிவயுத்துளார்.

by Swathi   on 21 Sep 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.