LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியா வந்த இத்தாலி நாட்டு பிரதமருடன் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்த இத்தாலி நாட்டு பிரதமருடன் இருதரப்பு உறவுகள், முதலீடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். 

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடந்தும், இந்திய-இத்தாலி தொழில்நுட்ப உச்சி மாநாடு டெல்லியில்  நடந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி பிரதமர் கியூசெப்சே கோன்டே ஒருநாள் பயணமாக, டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி உற்சாகமாக வரவேற்றார்.

இரு நாட்டு பிரதமர்களும், தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இதில், மருத்துவம், விண்வெளி, கல்வி, தூய்மை தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி, தகவல் தொடர்பு போன்ற பல்வேறு துறைகள் குறித்து விவாதம் நடந்தது.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

 ‘‘தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிகப்பெரிய வளர்ச்சிக்கு இன்னும் அதிகப்படியான தொழில்நுட்பங்கள் நமக்குத் தேவை.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மிக வேகமாக அதிகரித்து உள்ளது. தற்போது மாதத்திற்கு 250 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 1 ஜிபி இணைய கட்டணம் 90 சதவீதம் குறைந்திருக்கிறது.’’ இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையடுத்து, பிரதமர் மோடி-கோன்டே இடையேயான சந்திப்பு நடந்தது. இதில் இரு தரப்பு உறவுகள், முதலீடு, வர்த்தகம் குறித்து விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் பலப்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்தியா, இத்தாலி இடையே கடந்த நிதியாண்டில் 72 ஆயிரம் கோடியாக இருந்த வர்த்தகம், 2017-18ம் நிதியாண்டில் ரூ. 86 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

by Mani Bharathi   on 31 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.