|
|||||
தமிழகத்தில் 1,450 கோடி ரூபாய் செலவில் நியூட்ரினோ ஆய்வகம் !! |
|||||
தமிழகத்தில் சுமார் 1,450 கோடி ரூபாய் செலவீட்டில் நியூட்ரினோ அடிப்படையிலான ஆய்வு மையம் விரைவில் துவங்க உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் 101வது அறிவியல் மாநாடு, ஜம்முவில் நேற்று நடைபெற்றது. இதில், துவக்க உரையாற்றிய பிரதமர், மன்மோகன் சிங் கூறியதாவது:
அறிவியல் துறையில் நம் நாடு முன்னேற்றம் அடைய நமது அரசு பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். சர்வதேச அறிவியல் சமூகத்தில் இந்தியாவின் பங்கீடு முக்கியமானதாக இருக்கும். உலகின் முக்கிய ஆய்வு திட்டங்களில் இந்தியா பங்கு கொள்ளும்.
தமிழகத்தில் ரூ.1450 கோடியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும். பிரபல சிஇஆர்என் மையத்தில் இந்தியா அசோசியேட் உறுப்பினராகவிருக்கிறது. நம் நாட்டு விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதை நடைமுறையில் செயல்படுத்தி வருங்காலம் குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு வரும், "புரோட்டோடைப்' அணு உலை கட்டுமானம், இந்த ஆண்டில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அணு மின் தயாரிப்பில், உலக அளவில் நாம் முன்னணி இடத்தைப் பிடிப்போம்.
நம் அதிதீவிர முயற்சியின் வடிவங்களாக, சந்திரயான் மற்றும் மங்கல்யான் பயண முயற்சிகள் அமைந்துள்ளன. பருவமழையை கண்காணிக்கும், மான்சூன் மிஷன் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். பிடி விதைகள்' விதைகளை ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது. எனினும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
|||||
by Swathi on 03 Feb 2014 0 Comments | |||||
Tags: நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாடு நியூட்ரினோ ஆய்வகம் 101வது அறிவியல் மாநாடு பிரதமர் மன்மோகன் சிங் நியூட்ரினோ அடிப்படையிலான ஆய்வு மையம் Atomic Energy Lab Neutrino Lab | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|