|
|||||
இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர் !! |
|||||
சுமார் 21 கோடி மக்கள் இந்தியாவில் பசியால் வாடி வருவதாக, சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களால் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
உலகம் முழுவதும் தானிய உற்பத்தி 2,489 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து இருக்கிறது.
2011-2013 ஆண்டுகளில் உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை சுமார் 842 மி்ல்லியனாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2010-12 ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 870 மில்லியனில் இருந்து தற்போது 842 மில்லியனாக குறைந்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் 21 கோடி பேர் பசியால் வாடி வருகின்றனர். இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு ஆகும். மேலும், இந்தியாவை பொறுத்த வரையில் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட தற்போது குறைந்துள்ளதாகவே ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு 21 சதவிதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைந்துள்ளது. இதே போன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் 43.5 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. |
|||||
by Swathi on 14 Oct 2013 0 Comments | |||||
Tags: ஏழைகள் இந்தியா 21 கோடி ஏழை மக்கள் Poor People India | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|