|
|||||
இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினம் - அமெரிக்கா, ரஷ்யா வாழ்த்து |
|||||
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்
"சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது.
நம் இரு நாடுகளும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்குப் பொதுவான தொலைநோக்குடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு எனப் பல துறைகளில் பரவியுள்ளது.
இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீனச் சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்..." என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் "ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை அனுப்பி உள்ளார். அதில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தகுதிவாய்ந்த மரியாதைக்குரிய நாடாக விளங்குகிறது.
இந்திய - ரஷ்ய உறவு மிகவும் சிறப்பானது, முன்னுரிமையை அடிப்படையாக கொண்டது, பாதுகாப்புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று புதின் கூறியிருக்கிறார்.
சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பெற்றுள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அத்துடன் உலகளவில் மிக முக்கியமான விவகாரங்களில் இந்தியா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்று புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்..." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் "சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது. நம் இரு நாடுகளும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்குப் பொதுவான தொலைநோக்குடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு எனப் பல துறைகளில் பரவியுள்ளது. இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீனச் சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்..." என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள ரஷ்யத் தூதரகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் "ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுதந்திர தின வாழ்த்துகளை அனுப்பி உள்ளார். அதில், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா தகுதிவாய்ந்த மரியாதைக்குரிய நாடாக விளங்குகிறது. இந்திய - ரஷ்ய உறவு மிகவும் சிறப்பானது, முன்னுரிமையை அடிப்படையாக கொண்டது, பாதுகாப்புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று புதின் கூறியிருக்கிறார். சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளில் இந்தியா அங்கீகரிக்கப்பட்ட வெற்றியை பெற்றுள்ளது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அத்துடன் உலகளவில் மிக முக்கியமான விவகாரங்களில் இந்தியா தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என்று புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் கூட்டு முயற்சியால் ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம்..." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
| by hemavathi on 15 Aug 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|