எல்லை பகுதியில் வசிக்கும் பொது மக்களின் பாதுக்கப்பை மேம்படுத்துவதற்காக இந்திய-பாகிஸ்தான் எல்லையில், 10 அடி உயர சுவர் கட்டப்படும் என இந்திய பாதுகாப்புப் படை தலைமை இயக்குனர், எஸ்.எஸ்.தோமர் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது, கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், எல்லைப் பகுதியை ஒட்டிய நிலங்களில், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, எல்லைப் பகுதியில், பாதுகாப்பு சுவர் கட்ட முடிவு செய்து, அதற்கான திட்டத்தை, பொதுப்பணித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக, மாநில அரசின் ஒத்துழைப்புடன், எல்லைப் பகுதியில் உள்ள, 122 கிராமங்களில், நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்படும் என தோமர் தெரிவித்துள்ளார்.
|