இந்தியா முழுவதும் 3 ஆயிரம் ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இது தவிர ஒரு லட்சத்து 35 ஆயிரம் மைக்ரோ ஏ.டி.எம்.,களை அமைக்கவும் தபால் துறை திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தலா ஒரு ஏடிஎம் மையங்கள் அடுத்த மாதம் 5 ம் தேதி நிறுவப்படும் என இந்திய அஞ்சல் துறை செயலர் பத்மினி கோபிநாத் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு ஆண்டுக்குள் ஆயிரம் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்றும், அதற்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மூன்றாயிரமாக உயர்த்தப்படும் என்று பத்மினி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் விரிவாகா கூறியதாவது,
அஞ்சல் துறையின் இந்த புதிய சேவையின் மூலம் 26 கோடி பேர் பயன்பெறுவார்கள். வங்கி வாடிக்கையாளர்களும் இந்த ஏடிஎம் வசதியை பயன்படுத்துக்கொள்ள விரைவில் இதற்கான வசதிகள் உருவாக்கப்படும். வங்கி தொடங்க தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதி தரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பத்மினி. இந்திய அஞ்சல் துறை வசம் மக்களின் 6 லட்சம் கோடி ருபாய் சேமிப்புப் பணம் உள்ளது என்றும், இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள பணத்தில் சரிபாதியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
|