LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நிலையான வளர்ச்சி இலக்கு நாடுகள் பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்தது இந்தியா

நிலையான வளர்ச்சி இலக்கு  நாடுகள் பட்டியலில் (எஸ்டிஜி) முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது.

ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுத் தீர்வு கட்டமைப்பு அமைப்பு அண்மையில் 10-ஆவது எஸ்டிஜி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 99-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 193 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100 இடங்களுக்குள் வந்துள்ளது.

இந்த வரிசையில் அண்டை நாடுகளான சீனா 49-ஆவது இடத்தையும், பூட்டான் 74-ஆவது இடத்தையும், நேபாளம் 85-ஆவது இடத்தையும், வங்கதேசம் 114-ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 140-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் மாலத்தீவுகள் 53-ஆவது இடத்தையும், இலங்கை 93-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

இந்தப் பட்டியலில் வழக்கம்போல் ஐரோப்பிய நாடுகளே முதலிடத்தில் உள்ளன. முதலிடத்தில் பின்லாந்தும், 2-ஆவது இடத்தில் ஸ்வீடனும், 3-ஆவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 இடங்களை ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன.

2015-ம் ஆண்டு முதல் கணக்கிடும்போது இந்தத் தரவரிசையில் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளான நேபாளம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், மங்கோலியா ஆகிய நாடுகள் அதிவேக வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

 இதேபோல் பெனின், பெரு, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், கோஸ்டா ரிகா, சவுதி அரேபிய நாடுகளும், அதீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுத் தீர்வு கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

by hemavathi   on 29 Jun 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்
ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி  -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஹோமியோபதி மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை செய்ய அனுமதி -மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை திருச்செந்தூர் முருகன் கோயில் திருப்பணிக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளை 206 கோடி நன்கொடை
இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா இந்தியக் கடற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா
ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி ஒடிசா மாநில பள்ளிக்கல்வியின் முகத்தை மாற்றிய தமிழக ஆட்சிப்பணி அதிகாரி
பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர் பெங்களூரு பல்கலைக்கழகத்துக்கு மன்மோகன் சிங் பெயர்
தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம் தனிநபரின் தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது அத்துமீறல்- உயர்நீதிமன்றம்
உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல் உலகில்​ அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் - ஆய்வறிக்கையில் தகவல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.