|
|||||
நிலையான வளர்ச்சி இலக்கு நாடுகள் பட்டியலில் 100 இடங்களுக்குள் வந்தது இந்தியா |
|||||
![]() நிலையான வளர்ச்சி இலக்கு நாடுகள் பட்டியலில் (எஸ்டிஜி) முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது. ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுத் தீர்வு கட்டமைப்பு அமைப்பு அண்மையில் 10-ஆவது எஸ்டிஜி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 99-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 193 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100 இடங்களுக்குள் வந்துள்ளது. இந்த வரிசையில் அண்டை நாடுகளான சீனா 49-ஆவது இடத்தையும், பூட்டான் 74-ஆவது இடத்தையும், நேபாளம் 85-ஆவது இடத்தையும், வங்கதேசம் 114-ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 140-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் மாலத்தீவுகள் 53-ஆவது இடத்தையும், இலங்கை 93-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் வழக்கம்போல் ஐரோப்பிய நாடுகளே முதலிடத்தில் உள்ளன. முதலிடத்தில் பின்லாந்தும், 2-ஆவது இடத்தில் ஸ்வீடனும், 3-ஆவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 இடங்களை ஐரோப்பிய நாடுகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. 2015-ம் ஆண்டு முதல் கணக்கிடும்போது இந்தத் தரவரிசையில் கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளான நேபாளம், கம்போடியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், மங்கோலியா ஆகிய நாடுகள் அதிவேக வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இதேபோல் பெனின், பெரு, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், கோஸ்டா ரிகா, சவுதி அரேபிய நாடுகளும், அதீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டுத் தீர்வு கட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
|||||
by hemavathi on 29 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|