அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிவர் எட்வர்ட் ஸ்னோடென். சமீபத்தில் இவர் அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளை உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அமெரிக்கா மீது கடும் கோபம் கொண்டன. இதனால் அமெரிக்காவில் இருந்து தப்பிய ஸ்னோடென் தற்போது மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஸ்னோடெனுக்கு எந்த நாடும் அடைக்கலம் தரக்கூடாது என அமெரிக்கா அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் சட்ட ஆலோசகர் சாரா ஹாரிசன், இந்தியா, ஆஸ்திரியா, பொலிவியா, பிரேசில், சீனா, கியூபா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, நெதர்லாந்து, நிகரகுவா, நார்வே, போலந்து, ஸ்பெயின், ஸ்வீடன், வெனிசூலா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வேண்டி அவர் வேண்டுகோள் கடிதம் அனுப்பினார். இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர மறுத்துள்ளன.
|