LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

இந்தியா முழுவதும் இனி அனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே ஒரு எண் "112"  நடைமுறைக்கு வந்தது!

இந்தியா முழுவதும் இனி ஒரே ஒரு அவசர உதவி எண் 112 மூலம் காவல்துறை , ஆம்புலன்ஸ் , தீயணைப்புத்துறை , பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

எந்தத் துறையையும் அவசரமாகத்  தொடர்பு கொள்ள இனி,  ஒரே ஒரு மூன்று இலக்க எண்ணான "112 " என்னும் அவசர கால இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம். 

மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்த இந்த திட்டத்தில் "இமாச்சல் பிரதேசம்" மாநிலம் முதன் முதலாக இணைந்தது.  2019 ஆம் ஆண்டு பிப்ரவரி  19 ஆம் தேதி மத்திய அரசு "112" அவசர கால உதவி எண் சேவையை நடைமுறைப்படுத்தியது.

இதில் தமிழகம் , கேரளா , புதுச்சேரி  உள்ளிட்ட  16 மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் அவசர உதவிக்கு, ஒரே தொலைபேசி எண் 112 என்ற திட்டத்தில் இணைந்துள்ளனர்.  இதன் படி அவசர கால உதவி எண்களாக இருந்து இதுவரை தொடர்பு கொண்ட, காவல்துறை -100, தீயணைப்பு துறை - 101, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவை - 108 , பெண்களின் பாதுகாப்பிற்கு -  1090  போன்றவை  அனைத்தும் ஒரே எண்ணாக     " 112" என்ற எண்ணை மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

இனி அவசர சேவை உதவிக்கு அனைத்து வகையான துறைக்கும் இலவச தொலைபேசி எண் "112" மட்டுமே. இதன் மூலம் தமிழக மக்கள் அனைவரும் "112"என்ற எண்ணை மறவாமல் தேவைப்படும் பட்சத்தில் அரசிடம் இருந்து உதவிகளை நாடலாம். இந்த தொலைபேசி எண்ணிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. இது முற்றிலும் இலவசமானது. இதற்கான மொபைல் ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. 
இதனை பயன்படுத்தியும் எளிதாக அவசர கால உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த ஆப் பெயர் "112 India " ஆகும் . புதிய அவசர கால உதவி எண் தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அது பற்றிய விழிப்பணர்வை நீங்களும் ஏற்படுத்தலாம்.

by Mani Bharathi   on 14 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.