LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இந்த அற்புதமான அணியினால் இந்தியா பெருமை கொள்கிறது, பிரதமர் மோடி இந்திய மகளிர் ஹாக்கி அணி குறித்து புகழாரம்

இந்த அற்புத அணியினால் இந்தியா பெருமை கொள்கிறது, பிரதமர் மோடி இந்திய மகளிர் ஹாக்கி அணி குறித்து புகழாரம்

ஜப்பான், டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.  வெண்கலப் பதக்கத்திற்கான விளையாட்டின் போது நூலிழையில் வெற்றியை தவறவிட்டனர் மகளிர் ஹாக்கி அணியினர்,பதக்கத்தை தவறவிட்ட ஹாக்கி வீராங்கனைகளின் முக வாட்டத்தைக் கண்டு உண்மையில் இந்தியர்களின் மனமே கலங்கிப் போனது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் கீச்சக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'டோக்கியோ ஒலிம்பிக்கில் நமது மகளிர் ஹாக்கி அணி யின் சிறப்பான செயல்பாட்டை நாடு எப்போதும் நினைவில் கொள்ளும். அவர்கள் தங்கள் நல்ல திறனை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு உறுப்பினரும் தைரியம், திறமை நிறைந்தவர்களாக விளங்கினர். இந்த அற்புத அணியினால் இந்தியா பெருமை கொள்கிறது. மகளிர் ஹாக்கி அணி புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் பெருமைக்குரிய வீராங்கனைகள்

இராணி ராம்பால் (தலைவி)
ஹரியானா, குருஷேத்ரா மாவட்டத்தில் வண்டி இழுக்கும் ஒருவரின் மகள்.இவர் தலைமையில் 2017 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்தியா. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றது இந்தியா.

கவிதா புனியா

ஹரியானா,சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் .வயது 31. 18 வயதில் சர்வதேச அளவில் ஹாக்கி போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார்

நேஹா கோயல்

ஹரியானா,சோன்பேட் பகுதியைச் சேர்ந்தவர். வயது 24. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடியவர்.

சலீமா டெட்

ஜார்கண்ட், சிம்தேகாவின் பட்கிசாபர் கிராமத்தைச் சேர்ந்தவர்.வயது 19. அப்பா ஒரு விளையாட்டு வீரர் என்பதால் தானும் விளையாட்டில் ஆர்வம் கொண்டார்.

நிக்கி பிரான்

ஜார்கண்ட் ,குந்தியின், ஹேசல் கிராமத்தைச் சேர்ந்தவர். நக்சல் கோட்டையாக இருக்கும் பழங்குடிப் பகுதியைச் சேர்ந்தவர்.

லால் ரெசியாமி

மிசோரம் பகுதியைச் சேர்ந்தவர். ஆங்கிலம், இந்தி தெரியாது என்பதால் ஆரம்பத்தில் சைகை மூலமாகவே பேசி வந்துள்ளார். சியாமி என்று அழைக்கப்படுகிறார். வயது 21.

டீப் கிரேஸ் ஏக்கா

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.சாதாரண பழங்குடியின விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.வயது 27.

சுசீலா சானு

மணிப்பூர்இம்பாலா பகுதியைச் சேர்ந்தவர்.வயது 29. இவர் ஒரு ஓட்டுனரின் மகள்.

குர்ஜித் கவுர்
அமிர்தசரஸ் மியாடி பகுதியைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் .

வந்தனா கட்டாரியா

உத்ரகாண்ட், ரோஸ்னாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர். வயது 39.இவரது தந்தை ஒரு மல்யுத்த வீரர் ஆவார்கபூர்

நவஜோத் கவுர்

ஹரியானா, குருஷேத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு மெக்கானிக் ஆவார். வயது 26.

நவ்னீத் கவுர்

ஹரியானா, ஷாகாபாத், மார்கண்டா பகுதியைச் சேர்ந்தவர். வயது 25.

ஷர்மிளா தேவி

ஜார்கண்ட் மாநிலத்தவர். வயது 19.

மோனிகா
ஹரியானா மாநிலத்தவர்.வயது 27.

நிஷா
சோனேபாட் பகுதியைச் சேர்ந்தவர். வயது 26.தந்தை தையல் தொழில் செய்பவர்.

உதிதா

ஹரியானா,ஹிசார் பகுதியைச் சேர்ந்தவர். வயது 23.தந்தை ஒரு கைப்பந்து விளையாட்டு வீரர்.

ஸ்ஜேர்ட் மரிஜ்னே

உலக  அளவிலான இப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியை நான்காம் இடத்திற்குரியதாக்கிய சிறந்த பயிற்சியாளர் ஆவார்.

by R.Gnanajothi   on 11 Aug 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.